டாக்டர் ரங்கா சாலை வாய்க்கால்களில் உள்ள சகதியை கார்ப்பரேஷனின் ஒப்பந்த ஊழியர்கள் மீண்டும் அகற்றினர்.

மயிலாப்பூர் டாக்டர் ரங்கா சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை டிசம்பர் 14 ம் தேதி காலை கார்ப்பரேஷனின் ஒப்பந்த ஊழியர்கள் மீண்டும் மழை நீர் செல்லும் வடிகால் வாய்க்கால்களை சுத்தம் செய்தனர். மழை நேரத்தில் அடித்து வந்த குப்பைகள் அனைத்தையும் சுத்தம் செய்தனர்.

மழை நேரங்களில் ரங்கா சாலையில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிறது. அதேபோல் வாரன் சாலை மற்றும் ரங்கா ரோடு சந்திப்பில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் இரண்டு வாரங்களுக்கு முன் மழை நீர் தேங்காமல் இருக்க புதிய குழாய்களை பதித்துள்ளனர். இதன்காரணமாக இந்த பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பகுதி வாரியாக தெருக்களில் உள்ள முக்கிய உறுப்பினர்கள் குடியிருப்புகளில் உள்ள அசோசியேஷன் தலைவர்கள் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து செயல்பட்டால் தெருக்களில் மழை நீர் தேங்கி வெள்ளம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

உதாரணமாக ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆர்கே நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புகளின் அசோசியேஷன் தலைவர் பாலசுந்தரம் அந்த பகுதியில் வெள்ளம் ஏற்பட்ட நேரத்தில் மாநகராட்சியின் உள்ளூர் செயற்பொறியாளர் ஒருவரை அழைத்து பிரச்சனையை தீவிரமாக கண்டறிந்து சரிசெய்ததாக கூறுகிறார். எனவே அந்தந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புகளின் அசோசியேஷன் தலைவர்கள் மாநகராட்சி ஊழியர்களுடன் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் மழையால் ஏற்படும் பிரச்சனைகளை விரைவாக தீர்க்கலாம் என்று கூறுகிறார்.

admin

Recent Posts

எல்பிஜி நெருக்கடி: மக்கள் எரிவாயு நிறுவனத்தை நோக்கிச் செல்கிறார்கள், சிறிய கேட்டரிங் நிறுவனங்கள் நெருக்கடியில் உள்ளன

மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள ஒரு எரிவாயு நிறுவனத்திற்கு வெளியே புதன்கிழமை, மக்கள் கூட்டம் அலைமோதியது. எரிவாயு விநியோகம்…

6 hours ago

அல்போன்சா மைதானத்தில் நடைபெற்ற ‘மாஸ்டர்ஸ்’ டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்

தமிழ்நாடு மாஸ்டர்ஸ் மாநில டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை சமீபத்தில் மந்தை வெளிப்பாக்கம் அல்போன்சா மைதானத்தில் உள்ள ஜி.சி.சி உட்புற மைதானத்தில்…

1 day ago

தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளது

மந்தைவெளிப்பாக்கம் தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. (இந்த இடம் பொதுவாக…

2 days ago

சாய்பாபா கோயிலுக்கு அருகிலுள்ள கடைகள் இடிப்பு. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் நடவடிக்கை.

மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளை குடிமைப் பணியாளர்கள்…

2 days ago

மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கடைகளில் சிறப்பு சலுகைகள்

பெண்களுக்கான யோகா இலவச அனுபவம்; அடிப்படை பயிற்சி மந்தைவெளியில் உள்ள யோகா ஃபார் வெல்னஸ் ஸ்டுடியோவில். மார்ச் 8 காலை.…

3 days ago

மயிலாப்பூர் பள்ளி மாணவர்களுக்கான ‘அமைதி கிளப்புகள்’. இறுதிப் போட்டி.

காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…

1 week ago