மயிலாப்பூர் டாக்டர் ரங்கா சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை டிசம்பர் 14 ம் தேதி காலை கார்ப்பரேஷனின் ஒப்பந்த ஊழியர்கள் மீண்டும் மழை நீர் செல்லும் வடிகால் வாய்க்கால்களை சுத்தம் செய்தனர். மழை நேரத்தில் அடித்து வந்த குப்பைகள் அனைத்தையும் சுத்தம் செய்தனர்.
மழை நேரங்களில் ரங்கா சாலையில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிறது. அதேபோல் வாரன் சாலை மற்றும் ரங்கா ரோடு சந்திப்பில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் இரண்டு வாரங்களுக்கு முன் மழை நீர் தேங்காமல் இருக்க புதிய குழாய்களை பதித்துள்ளனர். இதன்காரணமாக இந்த பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பகுதி வாரியாக தெருக்களில் உள்ள முக்கிய உறுப்பினர்கள் குடியிருப்புகளில் உள்ள அசோசியேஷன் தலைவர்கள் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து செயல்பட்டால் தெருக்களில் மழை நீர் தேங்கி வெள்ளம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
உதாரணமாக ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆர்கே நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புகளின் அசோசியேஷன் தலைவர் பாலசுந்தரம் அந்த பகுதியில் வெள்ளம் ஏற்பட்ட நேரத்தில் மாநகராட்சியின் உள்ளூர் செயற்பொறியாளர் ஒருவரை அழைத்து பிரச்சனையை தீவிரமாக கண்டறிந்து சரிசெய்ததாக கூறுகிறார். எனவே அந்தந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புகளின் அசோசியேஷன் தலைவர்கள் மாநகராட்சி ஊழியர்களுடன் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் மழையால் ஏற்படும் பிரச்சனைகளை விரைவாக தீர்க்கலாம் என்று கூறுகிறார்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…