மயிலாப்பூர் டாக்டர் ரங்கா சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை டிசம்பர் 14 ம் தேதி காலை கார்ப்பரேஷனின் ஒப்பந்த ஊழியர்கள் மீண்டும் மழை நீர் செல்லும் வடிகால் வாய்க்கால்களை சுத்தம் செய்தனர். மழை நேரத்தில் அடித்து வந்த குப்பைகள் அனைத்தையும் சுத்தம் செய்தனர்.
மழை நேரங்களில் ரங்கா சாலையில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிறது. அதேபோல் வாரன் சாலை மற்றும் ரங்கா ரோடு சந்திப்பில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் இரண்டு வாரங்களுக்கு முன் மழை நீர் தேங்காமல் இருக்க புதிய குழாய்களை பதித்துள்ளனர். இதன்காரணமாக இந்த பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பகுதி வாரியாக தெருக்களில் உள்ள முக்கிய உறுப்பினர்கள் குடியிருப்புகளில் உள்ள அசோசியேஷன் தலைவர்கள் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து செயல்பட்டால் தெருக்களில் மழை நீர் தேங்கி வெள்ளம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
உதாரணமாக ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆர்கே நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புகளின் அசோசியேஷன் தலைவர் பாலசுந்தரம் அந்த பகுதியில் வெள்ளம் ஏற்பட்ட நேரத்தில் மாநகராட்சியின் உள்ளூர் செயற்பொறியாளர் ஒருவரை அழைத்து பிரச்சனையை தீவிரமாக கண்டறிந்து சரிசெய்ததாக கூறுகிறார். எனவே அந்தந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புகளின் அசோசியேஷன் தலைவர்கள் மாநகராட்சி ஊழியர்களுடன் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் மழையால் ஏற்படும் பிரச்சனைகளை விரைவாக தீர்க்கலாம் என்று கூறுகிறார்.
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…