மயிலாப்பூர் டாக்டர் ரங்கா சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை டிசம்பர் 14 ம் தேதி காலை கார்ப்பரேஷனின் ஒப்பந்த ஊழியர்கள் மீண்டும் மழை நீர் செல்லும் வடிகால் வாய்க்கால்களை சுத்தம் செய்தனர். மழை நேரத்தில் அடித்து வந்த குப்பைகள் அனைத்தையும் சுத்தம் செய்தனர்.
மழை நேரங்களில் ரங்கா சாலையில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிறது. அதேபோல் வாரன் சாலை மற்றும் ரங்கா ரோடு சந்திப்பில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் இரண்டு வாரங்களுக்கு முன் மழை நீர் தேங்காமல் இருக்க புதிய குழாய்களை பதித்துள்ளனர். இதன்காரணமாக இந்த பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பகுதி வாரியாக தெருக்களில் உள்ள முக்கிய உறுப்பினர்கள் குடியிருப்புகளில் உள்ள அசோசியேஷன் தலைவர்கள் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து செயல்பட்டால் தெருக்களில் மழை நீர் தேங்கி வெள்ளம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
உதாரணமாக ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆர்கே நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புகளின் அசோசியேஷன் தலைவர் பாலசுந்தரம் அந்த பகுதியில் வெள்ளம் ஏற்பட்ட நேரத்தில் மாநகராட்சியின் உள்ளூர் செயற்பொறியாளர் ஒருவரை அழைத்து பிரச்சனையை தீவிரமாக கண்டறிந்து சரிசெய்ததாக கூறுகிறார். எனவே அந்தந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புகளின் அசோசியேஷன் தலைவர்கள் மாநகராட்சி ஊழியர்களுடன் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் மழையால் ஏற்படும் பிரச்சனைகளை விரைவாக தீர்க்கலாம் என்று கூறுகிறார்.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…