மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள பிரபலம் வாய்ந்த காது கேளாதோர் மற்றும் கண் பார்வையற்றோருக்கான கிளார்க் பள்ளியின் பொன்விழா கடந்த ஆண்டு ஏப்ரலில் கொண்டாட திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் விழா தள்ளிவைக்கப்பட்டது. மீண்டும் இந்த வருடம் விழாவை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போதும் சூழ்நிலை சரியில்லாததால் மீண்டும் விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவிற்க்காக பள்ளி நிர்வாகம் சில திட்டங்கள் வகுத்திருந்தனர். பள்ளியிலுள்ள ஆடியோலஜி ஆய்வகத்தை மேம்படுத்துதல் மற்றும் பொன்விழா நிகழ்ச்சியில் குழந்தைகளின் இசை மற்றும் நடன திறன்களை வெளிப்படுத்தும் ஒரு பெரிய கலாச்சார நிகழ்ச்சி நடத்துதல், மேலும் இந்த பள்ளியில் படித்து வாழ்க்கையில் ஒரு பெரிய அடையாளத்தை உருவாக்கிய அனைத்து பழைய மாணவர்களையும் மேடையில் கொண்டு வந்து உரை நிகழ்த்துதல் போன்ற திட்டங்களை வகுத்திருந்தனர்.
இதற்கிடையில், ஆசிரியர்கள் சுமார் 25 பேர், ஆன்லைன் வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மாணவர்கள் பெரும்பாலும் காதுகேளாதவர்கள் மற்றும் கண் பார்வை இல்லாதோர் என்பதால் அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுப்பது மிகவும் சிரமம். கடந்த ஒரு வருடமாக மாணவர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு இப்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுவருகிறது. கடந்த ஆண்டு சுமார் 120 மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இது தவிர கிளார்க் பள்ளி தற்போது தங்களுடைய இரண்டாவது பயிற்சி பள்ளியை கேளம்பாக்கத்தில் நிறுவியுள்ளது.
காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…
ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…
மாசி மகம் சடங்குகள் மார்ச் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கின. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர்…
தபால் நிலைய பயனர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் நவம்பர் 2025 இல் ஒரு ஏடிஎம்…
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…