மீண்டும் தள்ளிவைக்கப்பட்ட காதுகேளாதோருக்கான பள்ளியின் பொன்விழா

மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள பிரபலம் வாய்ந்த காது கேளாதோர் மற்றும் கண் பார்வையற்றோருக்கான கிளார்க் பள்ளியின் பொன்விழா கடந்த ஆண்டு ஏப்ரலில் கொண்டாட திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் விழா தள்ளிவைக்கப்பட்டது. மீண்டும் இந்த வருடம் விழாவை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போதும் சூழ்நிலை சரியில்லாததால் மீண்டும் விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவிற்க்காக பள்ளி நிர்வாகம் சில திட்டங்கள் வகுத்திருந்தனர். பள்ளியிலுள்ள ஆடியோலஜி ஆய்வகத்தை மேம்படுத்துதல் மற்றும் பொன்விழா நிகழ்ச்சியில் குழந்தைகளின் இசை மற்றும் நடன திறன்களை வெளிப்படுத்தும் ஒரு பெரிய கலாச்சார நிகழ்ச்சி நடத்துதல், மேலும் இந்த பள்ளியில் படித்து வாழ்க்கையில் ஒரு பெரிய அடையாளத்தை உருவாக்கிய அனைத்து பழைய மாணவர்களையும் மேடையில் கொண்டு வந்து உரை நிகழ்த்துதல் போன்ற திட்டங்களை வகுத்திருந்தனர்.

இதற்கிடையில், ஆசிரியர்கள் சுமார் 25 பேர், ஆன்லைன் வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மாணவர்கள் பெரும்பாலும் காதுகேளாதவர்கள் மற்றும் கண் பார்வை இல்லாதோர் என்பதால் அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுப்பது மிகவும் சிரமம். கடந்த ஒரு வருடமாக மாணவர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு இப்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுவருகிறது. கடந்த ஆண்டு சுமார் 120 மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இது தவிர கிளார்க் பள்ளி தற்போது தங்களுடைய இரண்டாவது பயிற்சி பள்ளியை கேளம்பாக்கத்தில் நிறுவியுள்ளது.

admin

Recent Posts

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

4 days ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

5 days ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

1 week ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

2 weeks ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

2 weeks ago