செய்திகள்

மீண்டும் தள்ளிவைக்கப்பட்ட காதுகேளாதோருக்கான பள்ளியின் பொன்விழா

மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள பிரபலம் வாய்ந்த காது கேளாதோர் மற்றும் கண் பார்வையற்றோருக்கான கிளார்க் பள்ளியின் பொன்விழா கடந்த ஆண்டு ஏப்ரலில் கொண்டாட திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் விழா தள்ளிவைக்கப்பட்டது. மீண்டும் இந்த வருடம் விழாவை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போதும் சூழ்நிலை சரியில்லாததால் மீண்டும் விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவிற்க்காக பள்ளி நிர்வாகம் சில திட்டங்கள் வகுத்திருந்தனர். பள்ளியிலுள்ள ஆடியோலஜி ஆய்வகத்தை மேம்படுத்துதல் மற்றும் பொன்விழா நிகழ்ச்சியில் குழந்தைகளின் இசை மற்றும் நடன திறன்களை வெளிப்படுத்தும் ஒரு பெரிய கலாச்சார நிகழ்ச்சி நடத்துதல், மேலும் இந்த பள்ளியில் படித்து வாழ்க்கையில் ஒரு பெரிய அடையாளத்தை உருவாக்கிய அனைத்து பழைய மாணவர்களையும் மேடையில் கொண்டு வந்து உரை நிகழ்த்துதல் போன்ற திட்டங்களை வகுத்திருந்தனர்.

இதற்கிடையில், ஆசிரியர்கள் சுமார் 25 பேர், ஆன்லைன் வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மாணவர்கள் பெரும்பாலும் காதுகேளாதவர்கள் மற்றும் கண் பார்வை இல்லாதோர் என்பதால் அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுப்பது மிகவும் சிரமம். கடந்த ஒரு வருடமாக மாணவர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு இப்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுவருகிறது. கடந்த ஆண்டு சுமார் 120 மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இது தவிர கிளார்க் பள்ளி தற்போது தங்களுடைய இரண்டாவது பயிற்சி பள்ளியை கேளம்பாக்கத்தில் நிறுவியுள்ளது.

admin

Recent Posts

பெண் குழந்தைகளை ஆதரிக்கும் சேமிப்புத் திட்டத்தை பிரபலப்படுத்த மயிலாப்பூர் தபால் அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…

1 month ago

ஆர்.ஏ.புரம் கல்யாண மண்டபத்தில் 30 ஜோடிகளுக்கு ‘சுயமரியாதை கல்யாணம்’ நடத்திய தி.மு.க.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…

2 months ago

சென்னை மெட்ரோ: ஆர்.எச். சாலையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…

2 months ago

சிட்டி சென்டர் மாலில் பாட்டில் ஆர்ட் வேடிக்கை நிகழ்ச்சி. பிப்ரவரி 16 வரை.

மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…

2 months ago

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தெப்ப விழா; கோயில் குளத்திற்குள் பணிகள் தொடங்கியது.

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…

2 months ago