ஆழ்வார்பேட்டையிலுள்ள சென்னை மாநகராட்சி நடத்தும் சமுதாய நல கல்லூரியில் திறன் சார்ந்த குறுகிய கால சான்றிதழ் படிப்புகள் மற்றும் டிப்ளமோ படிப்புகள் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்படுகிறது.
இந்த கல்லூரியில் இந்த வருடம் புதிய மாணவர் சேர்க்கை நர்சிங் படிப்புகள், ஸ்போக்கன் இங்க்லிஷ், அடிப்படை கணினி கல்வி போன்ற பிரிவுகளில் நடைபெற்றது. இவர்களுக்கு தற்போது வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த படிப்புகளை சென்னை மாநகராட்சியும் ரோட்டரி கிளப்பும் சேர்ந்து நடத்துகிறது. இது தவிர சில தனியார் அமைப்புகளும் இந்த படிப்புகளுக்கு உதவி வருகிறது.
இந்த கல்லூரி ஆழ்வார்பேட்டை மேம்பாலம் முனையிலுள்ள வின்னர்ஸ் பேக்கரியின் பின்புறத்தில் உள்ளது. நீங்கள் இந்த கல்லூரியில் படிக்க விரும்பினால் நேரடியாக கல்லூரியை தொடர்புகொள்ளலாம். தற்போது கூட சில படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…