ஆழ்வார்பேட்டை சமுதாய நலக் கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது.

ஆழ்வார்பேட்டையிலுள்ள சென்னை மாநகராட்சி நடத்தும் சமுதாய நல கல்லூரியில் திறன் சார்ந்த குறுகிய கால சான்றிதழ் படிப்புகள் மற்றும் டிப்ளமோ படிப்புகள் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்படுகிறது.

இந்த கல்லூரியில் இந்த வருடம் புதிய மாணவர் சேர்க்கை நர்சிங் படிப்புகள், ஸ்போக்கன் இங்க்லிஷ், அடிப்படை கணினி கல்வி போன்ற பிரிவுகளில் நடைபெற்றது. இவர்களுக்கு தற்போது வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த படிப்புகளை சென்னை மாநகராட்சியும் ரோட்டரி கிளப்பும் சேர்ந்து நடத்துகிறது. இது தவிர சில தனியார் அமைப்புகளும் இந்த படிப்புகளுக்கு உதவி வருகிறது.

இந்த கல்லூரி ஆழ்வார்பேட்டை மேம்பாலம் முனையிலுள்ள வின்னர்ஸ் பேக்கரியின் பின்புறத்தில் உள்ளது. நீங்கள் இந்த கல்லூரியில் படிக்க விரும்பினால் நேரடியாக கல்லூரியை தொடர்புகொள்ளலாம். தற்போது கூட சில படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது.

Verified by ExactMetrics