கொரோனா கட்டுப்பாடுகளால் மாரி செட்டி தெருவில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் நடைபெற்றுவரும் பிரம்மோற்சவ விழா பாதிப்பு

கொரோனா தொற்று இப்போது மறுபடியும் வேகமாக பரவி வருவதால் அரசு சில விதிமுறைகளை கண்டிப்பாக பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க ஆணையிட்டுள்ளது. கோவில்கள், மசூதிகள் மற்றும் பேராலயங்களில் இரவு எட்டு மணிக்கு மேல் எவ்வித நிகழ்வுகளும் நடத்த கூடாது. இது தவிர வேறு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர் மாரி செட்டி தெருவில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏற்கனெவே தொடங்கி நடைபெற்றுவருகிறது. இப்போது அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப விழாவில் மாற்றங்களை செய்துள்ளனர். சனிக்கிழமை மாலை நடைபெற வேண்டிய கருட சேவை இப்போது வெள்ளிக்கிழமை மாலையே நடைபெறவுள்ளது. இதற்குப்பின் பிரம்மோற்சவ விழாவின் அனைத்து ஊர்வலமும் கோவிலுக்கு உள்ளேயே நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்று தேவாலயங்களிலும் இரவு எட்டுமணிக்கு மேல் எவ்வித பிரார்த்தனை கூட்டங்களும் நடத்தப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லஸ் அருகே உள்ள தேவாலயத்தில்
ஞாயிற்றுக்கிழமை அனைத்து பூசைகளும் இரவு ஏழு மணிக்குள்ளேயே முடிக்கப்படும் என்றும், ஏழு மணிக்கு மேல் மக்கள் வெளியில் எங்கும் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவர் என்று பாதிரியார் பீட்டர் தூமா தெரிவிக்கிறார்.

இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தேவாலயங்களில் நடைபெறும் பூசைகளுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை. ஆனால் கோவில்களில் பூசைகள் செய்வதில் சில பாதிப்புகள் உள்ளது.

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

14 hours ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

2 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழா: பிப்ரவரி 26 மாலை ‘லக்ன பத்திரிக்கை’ வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…

4 days ago

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

5 days ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

1 week ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

1 week ago