கொரோனா தொற்று இப்போது மறுபடியும் வேகமாக பரவி வருவதால் அரசு சில விதிமுறைகளை கண்டிப்பாக பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க ஆணையிட்டுள்ளது. கோவில்கள், மசூதிகள் மற்றும் பேராலயங்களில் இரவு எட்டு மணிக்கு மேல் எவ்வித நிகழ்வுகளும் நடத்த கூடாது. இது தவிர வேறு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர் மாரி செட்டி தெருவில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏற்கனெவே தொடங்கி நடைபெற்றுவருகிறது. இப்போது அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப விழாவில் மாற்றங்களை செய்துள்ளனர். சனிக்கிழமை மாலை நடைபெற வேண்டிய கருட சேவை இப்போது வெள்ளிக்கிழமை மாலையே நடைபெறவுள்ளது. இதற்குப்பின் பிரம்மோற்சவ விழாவின் அனைத்து ஊர்வலமும் கோவிலுக்கு உள்ளேயே நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதுபோன்று தேவாலயங்களிலும் இரவு எட்டுமணிக்கு மேல் எவ்வித பிரார்த்தனை கூட்டங்களும் நடத்தப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லஸ் அருகே உள்ள தேவாலயத்தில்
ஞாயிற்றுக்கிழமை அனைத்து பூசைகளும் இரவு ஏழு மணிக்குள்ளேயே முடிக்கப்படும் என்றும், ஏழு மணிக்கு மேல் மக்கள் வெளியில் எங்கும் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவர் என்று பாதிரியார் பீட்டர் தூமா தெரிவிக்கிறார்.
இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தேவாலயங்களில் நடைபெறும் பூசைகளுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை. ஆனால் கோவில்களில் பூசைகள் செய்வதில் சில பாதிப்புகள் உள்ளது.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…