அறுபது வயதிற்கு மேற்பட்டோருக்கு கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசி வழங்கும் மையங்கள்

கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது. தற்போது முதல் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட 45 வயதிற்கு மேற்பட்டோருக்கும் கொடுக்கப்படவுள்ளது. தற்போது தடுப்பூசியை கையாளும் விதத்தில் அனைத்து வசதியுடன் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் மட்டுமே கொடுக்கப்படவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நமது பகுதியில் ராயப்பேட்டை மீசாகிப்பேட்டையில், பேகம் தெருவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்படவுள்ளது. இங்கு நீங்கள் ஒரு அடையாள அட்டையுடன் வந்து இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். மீதமுள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் ஒரு வார காலத்திற்குள் நெட்ஒர்க் வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பிறகு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும். மேலும் மயிலாப்பூர் பகுதியில் தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனை தடுப்பூசியை வழங்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறது. ஆனால் இதுவரை அலுவலக ரீதியாக அதிகாரபூர்வ தகவல் வரவில்லை.

admin

Recent Posts

சைலன்ட் ரீடிங் குழு இந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) கூடுகிறது. குழந்தைகளுக்கான கதை சொல்லும் போட்டியை நடத்துகிறது.

மயிலாப்பூரில் சைலன்ட் ரீடிங் குழு இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 8 அன்று லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் குழந்தைகளுக்கான…

22 hours ago

மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகத்தில் ஆதார் அட்டை பதிவு செய்ய கூட்டமாக இருந்தால், கோபாலபுரத்தில் உள்ள துணை அஞ்சல் அலுவலகத்தை அணுகலாம்.

குழந்தைகள் அனைவரும் ஆதார் அட்டை பெற வேண்டும் என்பதால், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகத்தில் நீண்ட வரிசையில்…

22 hours ago

தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய எளிய முறையைப் பயன்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள்.

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்பட்டுள்ள தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஒரு எளிய யோசனையைக் கொண்டு வந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள…

3 days ago

புதிய கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் பள்ளி இருக்கும் பகுதிகள் மீண்டும் பரபரப்பாக இருந்தது.

நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த…

3 days ago

இந்த லயன்ஸ் கிளப் மந்தைவெளியில் கணித பயிற்சி மையத்தை நடத்துகிறது. ஏழை மாணவர்களுக்கு இலவசம்

லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பார்க் டவுன் அறக்கட்டளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு…

3 days ago

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வைகாசி விழா தொடங்கியது

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி விழா தொடங்கியது. ஜூன் 2 ஆம் தேதி காலை, ஏராளமான…

3 days ago