அறுபது வயதிற்கு மேற்பட்டோருக்கு கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசி வழங்கும் மையங்கள்

கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது. தற்போது முதல் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட 45 வயதிற்கு மேற்பட்டோருக்கும் கொடுக்கப்படவுள்ளது. தற்போது தடுப்பூசியை கையாளும் விதத்தில் அனைத்து வசதியுடன் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் மட்டுமே கொடுக்கப்படவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நமது பகுதியில் ராயப்பேட்டை மீசாகிப்பேட்டையில், பேகம் தெருவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்படவுள்ளது. இங்கு நீங்கள் ஒரு அடையாள அட்டையுடன் வந்து இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். மீதமுள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் ஒரு வார காலத்திற்குள் நெட்ஒர்க் வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பிறகு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும். மேலும் மயிலாப்பூர் பகுதியில் தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனை தடுப்பூசியை வழங்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறது. ஆனால் இதுவரை அலுவலக ரீதியாக அதிகாரபூர்வ தகவல் வரவில்லை.

admin

Recent Posts

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதவிருக்கும் மாணவர்களுக்காக சிறப்பு ஹோமம்.

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதவிருக்கும் மாணவர்களுக்காக, ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் பிப்ரவரி 7…

9 hours ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது; குளத்தில் திரளான பக்தர்கள் குவிந்தனர்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் மூன்று நாள் தைப்பூசத் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை (பிப்ரவரி 1) தொடங்கியது. கபாலீஸ்வரப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட…

2 days ago

நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்த சில பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…

1 week ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

2 weeks ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

2 weeks ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

3 weeks ago