கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது. தற்போது முதல் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட 45 வயதிற்கு மேற்பட்டோருக்கும் கொடுக்கப்படவுள்ளது. தற்போது தடுப்பூசியை கையாளும் விதத்தில் அனைத்து வசதியுடன் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் மட்டுமே கொடுக்கப்படவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நமது பகுதியில் ராயப்பேட்டை மீசாகிப்பேட்டையில், பேகம் தெருவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்படவுள்ளது. இங்கு நீங்கள் ஒரு அடையாள அட்டையுடன் வந்து இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். மீதமுள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் ஒரு வார காலத்திற்குள் நெட்ஒர்க் வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பிறகு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும். மேலும் மயிலாப்பூர் பகுதியில் தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனை தடுப்பூசியை வழங்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறது. ஆனால் இதுவரை அலுவலக ரீதியாக அதிகாரபூர்வ தகவல் வரவில்லை.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…