சாந்தோமில் நடைபெற்ற கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசியை வழங்குவதற்கான ஒத்திகை

சென்னை கார்ப்பரேஷன் இன்று நகரில் மூன்று மையங்களில் கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசியை மக்களுக்கு எவ்வாறு வழங்க வேண்டும் என்ற ஒத்திகையை நடத்தினர். இந்த மூன்று மையங்களில் ஒன்றான மயிலாப்பூர் சாந்தோம் அப்பு முதலி தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இந்த ஒத்திகை நடந்தது. தடுப்பூசி இன்னும் சில வாரங்களில் வந்தவுடன் யாருக்கு தடுப்பூசி வழங்கப்பட இருக்கிறதோ அவர்களுக்கு மருத்துவக்குழுவினர் ஐந்து படிகளை கடைபிடிக்க வேண்டும். இந்த படிகளை இன்று சுகாதார ஊழியர்கள் பயிற்சி மேற்கொண்டனர்.

தடுப்பூசி வந்தவுடன் முதலில் செவிலியர்கள், மற்றும் வைரஸ் தொற்றுக்கு எதிராக பணியாற்றிக்கொண்டிருப்பவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இவர்களுடைய விவரங்கள் ஏற்கனெவே சுகாதார மையங்களில் உள்ளது. அவ்வாறுள்ள முதல் இருபத்தைந்து பேருக்கு இன்று குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு அவர்கள் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர். தடுப்பூசி வந்தவுடன் தினமும் வழங்கப்படாது என்றும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்கப்படும் என்றும் சுகாதார ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

admin

Recent Posts

சைலன்ட் ரீடிங் குழு இந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) கூடுகிறது. குழந்தைகளுக்கான கதை சொல்லும் போட்டியை நடத்துகிறது.

மயிலாப்பூரில் சைலன்ட் ரீடிங் குழு இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 8 அன்று லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் குழந்தைகளுக்கான…

22 hours ago

மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகத்தில் ஆதார் அட்டை பதிவு செய்ய கூட்டமாக இருந்தால், கோபாலபுரத்தில் உள்ள துணை அஞ்சல் அலுவலகத்தை அணுகலாம்.

குழந்தைகள் அனைவரும் ஆதார் அட்டை பெற வேண்டும் என்பதால், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகத்தில் நீண்ட வரிசையில்…

23 hours ago

தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய எளிய முறையைப் பயன்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள்.

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்பட்டுள்ள தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஒரு எளிய யோசனையைக் கொண்டு வந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள…

3 days ago

புதிய கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் பள்ளி இருக்கும் பகுதிகள் மீண்டும் பரபரப்பாக இருந்தது.

நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த…

3 days ago

இந்த லயன்ஸ் கிளப் மந்தைவெளியில் கணித பயிற்சி மையத்தை நடத்துகிறது. ஏழை மாணவர்களுக்கு இலவசம்

லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பார்க் டவுன் அறக்கட்டளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு…

3 days ago

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வைகாசி விழா தொடங்கியது

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி விழா தொடங்கியது. ஜூன் 2 ஆம் தேதி காலை, ஏராளமான…

3 days ago