சாந்தோமில் நடைபெற்ற கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசியை வழங்குவதற்கான ஒத்திகை

சென்னை கார்ப்பரேஷன் இன்று நகரில் மூன்று மையங்களில் கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசியை மக்களுக்கு எவ்வாறு வழங்க வேண்டும் என்ற ஒத்திகையை நடத்தினர். இந்த மூன்று மையங்களில் ஒன்றான மயிலாப்பூர் சாந்தோம் அப்பு முதலி தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இந்த ஒத்திகை நடந்தது. தடுப்பூசி இன்னும் சில வாரங்களில் வந்தவுடன் யாருக்கு தடுப்பூசி வழங்கப்பட இருக்கிறதோ அவர்களுக்கு மருத்துவக்குழுவினர் ஐந்து படிகளை கடைபிடிக்க வேண்டும். இந்த படிகளை இன்று சுகாதார ஊழியர்கள் பயிற்சி மேற்கொண்டனர்.

தடுப்பூசி வந்தவுடன் முதலில் செவிலியர்கள், மற்றும் வைரஸ் தொற்றுக்கு எதிராக பணியாற்றிக்கொண்டிருப்பவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இவர்களுடைய விவரங்கள் ஏற்கனெவே சுகாதார மையங்களில் உள்ளது. அவ்வாறுள்ள முதல் இருபத்தைந்து பேருக்கு இன்று குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு அவர்கள் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர். தடுப்பூசி வந்தவுடன் தினமும் வழங்கப்படாது என்றும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்கப்படும் என்றும் சுகாதார ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

admin

Recent Posts

புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியா பூங்கா மீண்டும் திறப்பு. பார்வையாளர்கள் மற்றும் பள்ளி/கல்லூரி குழுக்கள் பார்வையிடலாம்.

ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…

3 days ago

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

3 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

3 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

3 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

1 month ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

1 month ago