சாந்தோமில் நடைபெற்ற கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசியை வழங்குவதற்கான ஒத்திகை

சென்னை கார்ப்பரேஷன் இன்று நகரில் மூன்று மையங்களில் கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசியை மக்களுக்கு எவ்வாறு வழங்க வேண்டும் என்ற ஒத்திகையை நடத்தினர். இந்த மூன்று மையங்களில் ஒன்றான மயிலாப்பூர் சாந்தோம் அப்பு முதலி தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இந்த ஒத்திகை நடந்தது. தடுப்பூசி இன்னும் சில வாரங்களில் வந்தவுடன் யாருக்கு தடுப்பூசி வழங்கப்பட இருக்கிறதோ அவர்களுக்கு மருத்துவக்குழுவினர் ஐந்து படிகளை கடைபிடிக்க வேண்டும். இந்த படிகளை இன்று சுகாதார ஊழியர்கள் பயிற்சி மேற்கொண்டனர்.

தடுப்பூசி வந்தவுடன் முதலில் செவிலியர்கள், மற்றும் வைரஸ் தொற்றுக்கு எதிராக பணியாற்றிக்கொண்டிருப்பவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இவர்களுடைய விவரங்கள் ஏற்கனெவே சுகாதார மையங்களில் உள்ளது. அவ்வாறுள்ள முதல் இருபத்தைந்து பேருக்கு இன்று குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு அவர்கள் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர். தடுப்பூசி வந்தவுடன் தினமும் வழங்கப்படாது என்றும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்கப்படும் என்றும் சுகாதார ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago