G20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் தங்கள் பிஸினஸ் சந்திப்புக்குப் பிறகு ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலை சுற்றிப் பார்த்தனர்.

இந்தியாவின் G20 தலைமையின் கீழ் இரண்டாவது G20 கட்டமைப்பு பணிக்குழு (FWG) கூட்டம் மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்றது.

அழைக்கப்பட்ட நாடுகள் மற்றும் பல்வேறு சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புகளின் விருந்தினர்கள் தவிர G20 உறுப்பு நாடுகளில் இருந்து 80 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ஜி 20 மாநாட்டின் பிரதிநிதிகள் சிலர் சனிக்கிழமை மாலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு, வழிகாட்டியுடன் சுற்றுப்பயணத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

ஒரு தொழில்முறை வழிகாட்டி இந்த விருந்தினர்களுக்கு கோயிலின் அம்சங்களையும் அதன் கட்டிடக்கலையையும் விளக்கி கோயிலைச் சுற்றி அழைத்துச் சென்றார்.

இந்நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் ஆர்.ஹரிஹரன் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டு வருகையின் முடிவில் விருந்தினர்களுக்கு பட்டு சால்வை அணிவித்தனர்.

இவர்கள் வருகையை முன்னிட்டு இந்த பகுதியை சுற்றி போலீசார் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி, வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்தினர்.

G20 FWG உலகளாவிய மேக்ரோ பொருளாதார பிரச்சனைகளில் கவனம் செலுத்துகிறது.

செய்தி, புகைப்படம்: எஸ் பிரபு

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலய மகா சம்ப்ரோக்ஷணம் சிறப்பாக நடைபெற்றது.

மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…

2 days ago

2026 தேர்தல்: பொது இடங்களில் உள்ள அரசு சார்ந்த விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகளை மறைக்கும் பணியாளர்கள்.

தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…

3 days ago

தொல்காப்பியப் பூங்காவின் முகத்துவாரப் பகுதி வற்றி வருகிறதா?

தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…

4 days ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம்: மார்ச் 16

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்), திங்கட்கிழமை, மார்ச் 16 அன்று காலை 9 மணி முதல்…

6 days ago

இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி, அரிசி பொருட்கள் விற்பனை.

மயிலாப்பூர் வாரன் சாலையில் வசிக்கும் அதிதி, 2025 முதல் பாரம்பரிய நெல் வகைகளின் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் அரிசி…

1 week ago

சட்டம், மேலாண்மை படிப்புகளுக்கான ஆலோசனை.

அபிராமபுரத்தில் அமைந்துள்ள கேரியர் லாஞ்சர் நிறுவனம், மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு 9, 10 மற்றும் 11…

1 week ago