G20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் தங்கள் பிஸினஸ் சந்திப்புக்குப் பிறகு ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலை சுற்றிப் பார்த்தனர்.

இந்தியாவின் G20 தலைமையின் கீழ் இரண்டாவது G20 கட்டமைப்பு பணிக்குழு (FWG) கூட்டம் மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்றது.

அழைக்கப்பட்ட நாடுகள் மற்றும் பல்வேறு சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புகளின் விருந்தினர்கள் தவிர G20 உறுப்பு நாடுகளில் இருந்து 80 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ஜி 20 மாநாட்டின் பிரதிநிதிகள் சிலர் சனிக்கிழமை மாலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு, வழிகாட்டியுடன் சுற்றுப்பயணத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

ஒரு தொழில்முறை வழிகாட்டி இந்த விருந்தினர்களுக்கு கோயிலின் அம்சங்களையும் அதன் கட்டிடக்கலையையும் விளக்கி கோயிலைச் சுற்றி அழைத்துச் சென்றார்.

இந்நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் ஆர்.ஹரிஹரன் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டு வருகையின் முடிவில் விருந்தினர்களுக்கு பட்டு சால்வை அணிவித்தனர்.

இவர்கள் வருகையை முன்னிட்டு இந்த பகுதியை சுற்றி போலீசார் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி, வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்தினர்.

G20 FWG உலகளாவிய மேக்ரோ பொருளாதார பிரச்சனைகளில் கவனம் செலுத்துகிறது.

செய்தி, புகைப்படம்: எஸ் பிரபு

admin

Recent Posts

ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம். ஆகஸ்ட்.31

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…

3 weeks ago

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

2 months ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 months ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 months ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 months ago