G20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் தங்கள் பிஸினஸ் சந்திப்புக்குப் பிறகு ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலை சுற்றிப் பார்த்தனர்.

இந்தியாவின் G20 தலைமையின் கீழ் இரண்டாவது G20 கட்டமைப்பு பணிக்குழு (FWG) கூட்டம் மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்றது.

அழைக்கப்பட்ட நாடுகள் மற்றும் பல்வேறு சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புகளின் விருந்தினர்கள் தவிர G20 உறுப்பு நாடுகளில் இருந்து 80 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ஜி 20 மாநாட்டின் பிரதிநிதிகள் சிலர் சனிக்கிழமை மாலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு, வழிகாட்டியுடன் சுற்றுப்பயணத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

ஒரு தொழில்முறை வழிகாட்டி இந்த விருந்தினர்களுக்கு கோயிலின் அம்சங்களையும் அதன் கட்டிடக்கலையையும் விளக்கி கோயிலைச் சுற்றி அழைத்துச் சென்றார்.

இந்நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் ஆர்.ஹரிஹரன் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டு வருகையின் முடிவில் விருந்தினர்களுக்கு பட்டு சால்வை அணிவித்தனர்.

இவர்கள் வருகையை முன்னிட்டு இந்த பகுதியை சுற்றி போலீசார் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி, வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்தினர்.

G20 FWG உலகளாவிய மேக்ரோ பொருளாதார பிரச்சனைகளில் கவனம் செலுத்துகிறது.

செய்தி, புகைப்படம்: எஸ் பிரபு

admin

Recent Posts

நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்த சில பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…

4 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

1 week ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

1 week ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

2 weeks ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

4 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago