Categories: சமூகம்

மெரினா குப்பம் பகுதியில் டிக்னிட்டி பவுண்டேஷன் முதியவர்களுக்கு புத்துணர்வூட்டும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது

மெரினா கடற்கரையோரம் உள்ள குப்பமான முல்லை மாநகரில் மும்பையை தலைநகரமாக கொண்டு இயங்கும் டிக்னிட்டி பவுண்டேஷன், இந்த பகுதியில் உள்ள மூத்த குடிமக்களுக்கு சில உதவிகளை செய்து வருகிறது. டிக்னிட்டி பவுண்டேஷனுக்கு சென்னையிலும் அலுவலகம் உள்ளது. கடந்த மே மாதம் முதல் இந்த குப்பத்தில் வசித்து வரும் சுமார் அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கு இவர்களின் பவுண்டேஷன் சார்பாக புத்துணர்வு ஊட்டும் விதமாக முதியோருக்கான விளையாட்டுகள், கைவினை பொருட்கள் தயாரித்தல் மற்றும் இன்னும் சில விளையாட்டுகளை நடத்தி வருகின்றனர். ஏனென்றால் கடந்த வருடத்திலிருந்து கொரோனா காரணமாக இவர்கள் வீட்டிலேயே முடங்கி இருந்துள்ளனர். சிலர் மன இருக்கத்திற்கு ஆளாகியுள்ளதால் அவர்களுக்கு இந்த புத்துணர்வு அளிக்கும் நிகழ்ச்சியை நடத்துவதாக டிக்னிட்டி பவுண்டேஷன் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சிகளை நடத்த முல்லை மாநகர் மக்கள் அங்கிருக்கும் சமுதாய கூடத்தில் நடத்த இடம் கொடுத்துள்ளனர். நிகழ்ச்சிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இங்கு வரும் முதியவர்களுக்கு மதிய உணவு மற்றும் தேநீர் இலவசமாக வழங்குகின்றனர். தற்போது டிக்னிட்டி பவுண்டேஷனுக்கு நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் உள்ள மேற்கூரை பழுதடைந்து உள்ளதாகவும், அதே நேரத்தில் இங்கு கழிப்பறை வசதி போதுமானதாக இல்லை என்றும் ஆகவே இவற்றை சரி செய்ய உதவியை எதிர்பார்க்கின்றனர். மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு இந்த முதியோர்களுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு புதிய கட்டிடம் கட்டிக்கொடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுபோன்று நகரின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் முதியோர்களுக்கு புத்துணர்வு ஊட்டும் நிகழ்ச்சிகளை நடத்துவதே டிக்னிட்டி பவுண்டேஷனின் வேலையாகும்.

admin

Recent Posts

மயிலாப்பூர் பள்ளி மாணவர்களுக்கான ‘அமைதி கிளப்புகள்’. இறுதிப் போட்டி.

காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…

4 days ago

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கான படிப்பு அரங்கம், குழந்தைகளுக்கான பிரிவும் உள்ளது.

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…

4 days ago

மெரினா கடற்கரையில் மாசி மகம் சடங்குகள்

மாசி மகம் சடங்குகள் மார்ச் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கின. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர்…

4 days ago

மயிலாப்பூர் தபால் நிலையத்தில் உள்ள ஏடிஎம் இப்போது 24 மணி நேரமும் செயல்படுகிறது.

தபால் நிலைய பயனர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் நவம்பர் 2025 இல் ஒரு ஏடிஎம்…

6 days ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

1 week ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

1 week ago