ஆர்.கே. மட சாலை மந்தைவெளி தெரு சந்திப்பில் உள்ள மந்தைவெளி துணை தபால் நிலையத்தில் ஊரடங்கு நேரத்தில் குறைந்தளவு ஊழியர்களை வைத்து சேவைகளை வழங்கி வந்தனர். தற்போது இந்த துணை தபால் நிலையம் ரொம்ப பிஸியாக இயங்கி வருவதாக போஸ்ட் மாஸ்டர் சத்யபாமா தெரிவித்துள்ளார். மேலும் தற்போது ஒரு மாதத்தில் தபால் நிலையத்தில் சுமார் முந்நூறு சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டுள்ளது என்றும் ஊரடங்கு நேரத்தில் தபால் சேவைகள் கூட சுமார் நாற்பது சதவீதம் அளவுக்கு சரிந்தது என்றும் தற்போது மீண்டும் பிஸியாக இயங்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கிறார். ஆனால் ஊரடங்கு நேரத்தில் மருந்து பார்சல்கள் அதிகம் வந்தது. தற்போது மக்கள் இந்த தபால் நிலையத்திற்கு தங்களுடைய அக்கௌன்ட் சேவைகளை புதுப்பிக்கவும் மற்ற வேலைகளுக்காகவும் வரத்தொடங்கியுள்ளதால் தற்போது மீண்டும் பிஸியாக இயங்க தொடங்கியுள்ளது.
இந்த தபால் நிலையத்திற்கு நவம்பர் 2020ல் புதியகட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வேலை நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மட்டுமே அனைத்து சேவைகளும் கிடைக்கும். மாலை 5.30 வரை திறந்திருந்தாலும் இந்த நேரத்தில் ஸ்டாம்ப் மட்டுமே விற்கப்படும்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…