ஆர்.கே. மட சாலை மந்தைவெளி தெரு சந்திப்பில் உள்ள மந்தைவெளி துணை தபால் நிலையத்தில் ஊரடங்கு நேரத்தில் குறைந்தளவு ஊழியர்களை வைத்து சேவைகளை வழங்கி வந்தனர். தற்போது இந்த துணை தபால் நிலையம் ரொம்ப பிஸியாக இயங்கி வருவதாக போஸ்ட் மாஸ்டர் சத்யபாமா தெரிவித்துள்ளார். மேலும் தற்போது ஒரு மாதத்தில் தபால் நிலையத்தில் சுமார் முந்நூறு சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டுள்ளது என்றும் ஊரடங்கு நேரத்தில் தபால் சேவைகள் கூட சுமார் நாற்பது சதவீதம் அளவுக்கு சரிந்தது என்றும் தற்போது மீண்டும் பிஸியாக இயங்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கிறார். ஆனால் ஊரடங்கு நேரத்தில் மருந்து பார்சல்கள் அதிகம் வந்தது. தற்போது மக்கள் இந்த தபால் நிலையத்திற்கு தங்களுடைய அக்கௌன்ட் சேவைகளை புதுப்பிக்கவும் மற்ற வேலைகளுக்காகவும் வரத்தொடங்கியுள்ளதால் தற்போது மீண்டும் பிஸியாக இயங்க தொடங்கியுள்ளது.
இந்த தபால் நிலையத்திற்கு நவம்பர் 2020ல் புதியகட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வேலை நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மட்டுமே அனைத்து சேவைகளும் கிடைக்கும். மாலை 5.30 வரை திறந்திருந்தாலும் இந்த நேரத்தில் ஸ்டாம்ப் மட்டுமே விற்கப்படும்.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…