மந்தைவெளியில் உள்ள திருவெங்கடம் தெருவில் உள்ள ஒரு பகுதியில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி வரும் இளைஞர் தேஜஸ் கிரிக்கெட் விளையாட செல்லும்போது அந்த பகுதியில் வசித்து வரும் குடியிருப்பாளர்கள் கூட கவனிக்காத ஒரு விஷயத்தைக் கண்டார்.
தெருவில் சுற்றி திரியும் விலங்குகள், பறவைகள் தாகத்தை தணிக்க இந்த கோடையில் தெரு மூலைகளில் ப்ளூ கிராஸ் வைத்திருந்த பீங்கான் நீர் கிண்ணத்தை அவர் கவனித்தார்.
சமீபத்தில், தேஜஸ் கிண்ணத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதைக் கவனித்தார். எனவே தெருவில் கட்டிட வேலை செய்யும் ஒரு மேஸ்திரியிடம் இதே போன்று சிமென்டில் செய்து தருமாறு கேட்டார் அந்த மேஸ்திரியும் இந்த சேவைக்கு ஒப்புக்கொண்டு இலவசமாக செய்து கொடுத்தார்.
இளைஞர் தேஜஸ் செய்த காரியம், மற்ற இளைஞர்களும் சேவை செய்ய ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
<<செய்தி மற்றும் படம் பாஸ்கர் சேஷாத்ரி>>
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…