மயிலாப்பூர் பகுதி இளைஞர்கள் பல வருடங்களாக வார இறுதி நாட்களில் கிரிக்கெட் விளையாடுவதற்கு பயன்படுத்தி வந்த இடம் பி.எஸ் பள்ளி அருகே உள்ள விளையாட்டு மைதானம். இந்த மைதானம் ஒரு வழக்கின் காரணமாக பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது.
சமீபத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கோவிலுக்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்தார் அப்போது எம்.எல்.ஏ வேலுவுடன் இந்த மைதானத்தையும் பார்வையிட்டுள்ளார். மேலும் இது பற்றி பள்ளி நிர்வாகத்திடம் பேசியதாகவும் அவர்கள் பள்ளி வேலைநாட்கள் தவிர மற்ற நேரங்களில் மக்கள் பயன்படுத்தி கொள்ள ஒப்புக்கொண்டதாகவும் எம்.எல்.ஏ தா.வேலு தெரிவித்துள்ளார். மேலும் இந்த மைதானத்தில் சில வேலைகள் செய்து முன்பிருந்தது போன்று பொதுமக்கள் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும், இந்த பிரச்சனை பற்றி அடுத்த வாரம் பி.எஸ்.பள்ளி நிர்வாகத்தினரிடம் திரும்ப பேசவுள்ளதாகவும் அதில் எடுக்கப்படும் முடிவுகள் மக்களுக்கு தெரியப்படுத்தப்படும் என்றும் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…