தேர்தல் 2021: மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் த.வேலுவின் தேர்தல் அறிக்கை

மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் த.வேலு மயிலாப்பூர் பகுதிக்கு அவர் தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

  • 1. பழைய குடிசை மாற்று வாரிய கட்டிடங்களை இடித்துவிட்டு அங்கு வசித்துவரும் அனைத்து மக்களுக்கும் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.
  • இங்கு பட்டா இல்லாமல் வசித்து வரும் மக்களுக்கு ஆய்வு செய்து பட்டா வழங்கப்படும்.
  • மயிலாப்பூரில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன பேருந்து நிறுத்தம் கட்டிக்கொடுக்கப்படும்.
  • ரேஷன் கடைகள் சிறந்த முறையில் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • ஆதரவற்ற வயது முதிர்ந்தோருக்கான மாதாந்திர உதவித்தொகை மற்றும் விதவைகளுக்கான உதவித்தொகை மற்றும் திருமண நிதிஉதவி திட்டங்கள் போன்றவை அனைத்து மக்களும் துரிதமாக பெற்றிட அதிலுள்ள பிரச்சனைகள் சரிசெய்யப்படும்.
  • பழைய கோவில்கள் சீரமைக்கப்பட்டு அங்கு தினமும் பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும்.
  • சாந்தோம் குப்பம் பகுதியில் புதியதாக மீன் அங்காடி கட்டித்தரப்படும்.
  • எம்.எல்.ஏ அலுவலகத்தில் மக்கள் தங்களுடைய பிரச்சனைகளை சுலபமாக தெரிவிக்கும் வகையில் அதற்கான செயல் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

மேற்கண்ட திட்டங்கள் திமுக வேட்பாளர் மயிலாப்பூர் பகுதிக்கு அறிவித்துள்ள முக்கிய திட்டங்களாகும்.

admin

Recent Posts

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

1 week ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

1 week ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

2 weeks ago

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

3 weeks ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

3 weeks ago