அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜனும் மார்ச் 25 மாலை, இணைந்து பிரச்சாரத்தை தொடங்கினர்.
தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளும் அவர்களது தொண்டர்களும் பெருமளவில் திரண்டிருந்தனர்; தெருக்களில் கட்சிக் கொடிகளே ஆதிக்கம் செலுத்தின.
வருடாந்திர பங்குனி திருவிழா நடைபெற்று வரும் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு பழனிசாமி சென்றதாகவும், பின்னர் உள்ளூர் வீதிகளில் வலம் வந்து மந்தைவெளி மார்க்கெட் பகுதிக்கு வெளியே மக்களிடையே உரையாற்றியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றது.
அவரும் தமிழிசையும் ஒரு வேனில் அருகருகே நின்றிருந்தனர்.




