சென்னை கார்ப்பரேஷனுக்கு சொந்தமான லஸ் அவென்யூவில் புதிய நிலத்தில் ஜவஹர் பால் பவன் வளாகத்திற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
லஸ்ஸில் சென்னை கார்ப்பரேஷனுக்கு சொந்தமான இடத்தில் ஜவஹர் பால் பவன் இப்போது இயங்கிவருகிறது.
இந்த பால் பவன் குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கு பாட்டு பாடுதல், நாட்டுப்புற நடனம் மற்றும் பாட்டு, ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் போன்ற கலைகளை கற்றுக்கொடுக்கிறது. இதில் ஐந்து முதல் பதினாறு வயதுடைய மாணவர்கள் சேரலாம். கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் மத்திய அரசின் திட்டங்களிலும், போட்டிகளிலும் பங்குபெறலாம். அவ்வாறு பங்கு பெற்று அவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழுக்கு அனைத்து துறைகளிலும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
கடந்த நான்கு வருங்களாக இந்த பால் பவனுக்கு சரியான கட்டிட வசதி இல்லாததால் சுறுசுறுப்பாக இயங்கவில்லை. சமீபத்தில் தமிழக முதலமைச்சரால் இந்த திட்டம் முறையாக தொடங்கப்பட்டது. ரூ.2 கோடிக்கு மேலான தொகை இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வளாகம் லஸ்ஸில் உள்ள சென்னை கார்ப்பரேஷனுக்கு சொந்தமான இடத்தில் பதினாறு வகுப்பறைகள், ஒரு அரங்கம் மற்றும் ஒரு நூலகத்துடன் இரண்டு மாடியில் அமையவுள்ளது. ஒரு வருட காலத்தில் இந்த பணிகள் அனைத்தும் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…
ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…
மாசி மகம் சடங்குகள் மார்ச் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கின. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர்…
தபால் நிலைய பயனர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் நவம்பர் 2025 இல் ஒரு ஏடிஎம்…
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…