சுபம் கணேசன் மயிலாப்பூரில் மிகவும் பிரபலமான கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருபவர். இவருடைய கடை மந்தைவெளி செயின்ட் மேரிஸ் சாலையில் சுபம் புட்ஸ் என்ற பெயரில் இயங்கி வருகிறது. கோவிட் -19 தொற்று காரணமாக இவருடைய தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது. கடந்த சிலமாதங்களாக இவரின் கடைக்கு வழக்கமாக வரும் வாடிக்கையாளர்கள் கடையில் முருக்கு, மைசூர்பாக்கு , சாம்பார் பொடி, ரசப்பொடி, போன்ற பொடி வகைகளை கேட்டுள்ளனர். இதை கருத்தில்கொண்டு தற்போது கணேசன் ஆன்லைன் கடையை திறந்துள்ளார். மக்கள் எங்கிருந்தாலும் ஆன்லைன் மூலமாக தேவையானவற்றை வாங்கிக்கொள்ளலாம். இதன் மூலம் அவருடைய வியாபாரம் சற்று அதிகமாகி உள்ளதாக தெரிவிக்கிறார்.
இவருடைய கடை செயின்ட் மேரிஸ் சாலையில் வி.சி.கார்டன் அருகே உள்ளது. கடை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். தொடர்பு கொள்ள தொலைபேசி எண்: 9841019066. வலைதள முகவரி : https://d-subhamfoods.dotpe.in
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…