மயிலாப்பூர் முன்னாள் எம். எல். ஏ ஆர்.நடராஜ் அவர்கள் தன்னுடைய அலுவலகத்தை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள சங்கீதா உணவகம் அருகே ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திறந்துள்ளார். தான் எம்.எல்.ஏ.வாக இருந்த போது மயிலாப்பூரில் உள்ள அடுக்குமாடி குடிருப்பளர்களின் சங்கங்கள் தன்னுடன் தொடர்பில் இருந்ததாகவும், தற்போதும் அந்த நட்பு தொடரவும், இது தவிர பொதுமக்கள் தங்கள் குறைகளை அவரிடம் கூறவும் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக எம்.எல்.ஏ நடராஜ் தெரிவித்துள்ளார். மேலும் இது தவிர நடராஜ் அவர்கள் சில புத்தகங்கள் எழுதி வருகிறார். சிறிய அளவிலான பதிப்பகமும் நடத்தி வருகிறார். இந்த புதிய அலுவலகத்தில் நடராஜ் வாரத்தில் அனைத்து நாட்களிலும் குறிப்பிட்ட நேரங்களில் வந்து செல்வார் என்றும் அந்த நேரத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடராஜ் தவிர இந்த அலுவலகத்தில் அவருடைய பதிப்பக வேலைகளை பார்க்கும் அலுவலக ஊழியர்களும் எப்பொழுதும் பணியில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகவரி:
சுவாதி அபார்ட்மெண்ட்ஸ், எண்.59, 3வது மெயின் ரோடு, ஆர். ஏ. புரம், சென்னை 600028.
தொலைபேசி எண்: 9840484411 / மின்னஞ்சல் முகவரி : natarajips@gmail.com
64 ஸ்கொயர்ஸ் செஸ் அகாடமி, மே 31 சனிக்கிழமை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி சென்டர்…
மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மே 30 வரை…
மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கடை…
மயிலாப்பூரில் இன்று காலை வழி தவறி, மயிலாப்பூர் குடியிருப்பாளர்களின் தளங்களில் ஆன்லைனில் பகிரப்பட்ட செய்திகளால் ‘காணாமல் போனதாக’ அறிவிக்கப்பட்ட முதியவர்…
இந்த புதன்கிழமை நண்பகல் முதல் ‘நபர் காணவில்லை’ என்ற ஆன்லைன் செய்தி பரவி வருகிறது. இதுதான் செய்தி – மந்தைவெளிப்பாக்கம்…
மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…