Categories: சமூகம்

மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ ஆர். நடராஜின் அலுவலகம் ஆர். ஏ.புரத்தில் திறக்கப்பட்டது.

மயிலாப்பூர் முன்னாள் எம். எல். ஏ ஆர்.நடராஜ் அவர்கள் தன்னுடைய அலுவலகத்தை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள சங்கீதா உணவகம் அருகே ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திறந்துள்ளார். தான் எம்.எல்.ஏ.வாக இருந்த போது மயிலாப்பூரில் உள்ள அடுக்குமாடி குடிருப்பளர்களின் சங்கங்கள் தன்னுடன் தொடர்பில் இருந்ததாகவும், தற்போதும் அந்த நட்பு தொடரவும், இது தவிர பொதுமக்கள் தங்கள் குறைகளை அவரிடம் கூறவும் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக எம்.எல்.ஏ நடராஜ் தெரிவித்துள்ளார். மேலும் இது தவிர நடராஜ் அவர்கள் சில புத்தகங்கள் எழுதி வருகிறார். சிறிய அளவிலான பதிப்பகமும் நடத்தி வருகிறார். இந்த புதிய அலுவலகத்தில் நடராஜ் வாரத்தில் அனைத்து நாட்களிலும் குறிப்பிட்ட நேரங்களில் வந்து செல்வார் என்றும் அந்த நேரத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடராஜ் தவிர இந்த அலுவலகத்தில் அவருடைய பதிப்பக வேலைகளை பார்க்கும் அலுவலக ஊழியர்களும் எப்பொழுதும் பணியில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:
சுவாதி அபார்ட்மெண்ட்ஸ், எண்.59, 3வது மெயின் ரோடு, ஆர். ஏ. புரம், சென்னை 600028.
தொலைபேசி எண்: 9840484411 / மின்னஞ்சல் முகவரி : natarajips@gmail.com

admin

Recent Posts

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

1 week ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

1 week ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

2 weeks ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

2 weeks ago

பாரதிய வித்யா பவனின் மார்கழி இசை விழா நவம்பர் 20ல் தொடங்குகிறது.

பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…

2 weeks ago

ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேகம் நவம்பர் 23ல்.

மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…

2 weeks ago