மயிலாப்பூர் முன்னாள் எம். எல். ஏ ஆர்.நடராஜ் அவர்கள் தன்னுடைய அலுவலகத்தை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள சங்கீதா உணவகம் அருகே ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திறந்துள்ளார். தான் எம்.எல்.ஏ.வாக இருந்த போது மயிலாப்பூரில் உள்ள அடுக்குமாடி குடிருப்பளர்களின் சங்கங்கள் தன்னுடன் தொடர்பில் இருந்ததாகவும், தற்போதும் அந்த நட்பு தொடரவும், இது தவிர பொதுமக்கள் தங்கள் குறைகளை அவரிடம் கூறவும் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக எம்.எல்.ஏ நடராஜ் தெரிவித்துள்ளார். மேலும் இது தவிர நடராஜ் அவர்கள் சில புத்தகங்கள் எழுதி வருகிறார். சிறிய அளவிலான பதிப்பகமும் நடத்தி வருகிறார். இந்த புதிய அலுவலகத்தில் நடராஜ் வாரத்தில் அனைத்து நாட்களிலும் குறிப்பிட்ட நேரங்களில் வந்து செல்வார் என்றும் அந்த நேரத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடராஜ் தவிர இந்த அலுவலகத்தில் அவருடைய பதிப்பக வேலைகளை பார்க்கும் அலுவலக ஊழியர்களும் எப்பொழுதும் பணியில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகவரி:
சுவாதி அபார்ட்மெண்ட்ஸ், எண்.59, 3வது மெயின் ரோடு, ஆர். ஏ. புரம், சென்னை 600028.
தொலைபேசி எண்: 9840484411 / மின்னஞ்சல் முகவரி : natarajips@gmail.com
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…