ஆழ்வார்பேட்டை எம்.ஆர்.சி நகரில் உள்ள அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் இலவச ஹெல்த் கேர் திட்டம்

இந்தியாவின் 75வது சுதந்திரதினம் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையின் 40வது ஆண்டு விழாவை முன்னிட்டு, எம்ஆர்சி நகர் & ஆழ்வார்பேட்டையில் உள்ள அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மல்டி-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 18 வரை இலவச சலுகையுடன் கூடிய மருத்துவ பராமரிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

இந்த இலவச மருத்துவ சேவையில் அப்பல்லோவின் நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்வது மற்றும் நல்ல ஆரோக்கியத்தை உறுதிசெய்வதற்காக தனிப்பட்ட சுகாதார விஷயங்களில் வழிகாட்டுதலை வழங்குவது ஆகியவை அடங்கும். மயிலாப்பூர்வாசிகள் பின்வரும் சேவைகளில் ஏதேனும் அல்லது அனைத்தையும் இலவசமாகத் தேர்வு செய்யலாம்: அடிப்படை மருத்துவ சேவை, இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு சோதனை, கண் பரிசோதனை, ENT மற்றும் பல் பரிசோதனை, மருத்துவ பதிவுகள் மற்றும் பரிந்துரைகள் டிஜிட்டல் மயமாக்கல், தனிப்பயனாக்கப்பட்ட ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறை திட்டம் மற்றும் சில.

இதில் பயன் பெற பதிவுகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளது; சிறப்பு சேவைகளைப் பயன்படுத்துவதற்கான போக்குவரத்து மருத்துவமனையால் ஏற்பாடு செய்யப்படும். மருத்துவமனைகயின் மக்கள் தொடர்பாளர் பிரிவின் செய்தி குறிப்பு கூறுகிறது.

மேலும் விவரங்களுக்கு – ராமநாதன் லக்ஷ்மணன் / மேலாளர்- செயல்பாடுகள்/ அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனைகள் – எம்.ஆர்.சி நகர் தொலைபேசி எண்: 044 66862000, 6380742387

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago