ஆழ்வார்பேட்டை எம்.ஆர்.சி நகரில் உள்ள அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் இலவச ஹெல்த் கேர் திட்டம்

இந்தியாவின் 75வது சுதந்திரதினம் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையின் 40வது ஆண்டு விழாவை முன்னிட்டு, எம்ஆர்சி நகர் & ஆழ்வார்பேட்டையில் உள்ள அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மல்டி-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 18 வரை இலவச சலுகையுடன் கூடிய மருத்துவ பராமரிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

இந்த இலவச மருத்துவ சேவையில் அப்பல்லோவின் நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்வது மற்றும் நல்ல ஆரோக்கியத்தை உறுதிசெய்வதற்காக தனிப்பட்ட சுகாதார விஷயங்களில் வழிகாட்டுதலை வழங்குவது ஆகியவை அடங்கும். மயிலாப்பூர்வாசிகள் பின்வரும் சேவைகளில் ஏதேனும் அல்லது அனைத்தையும் இலவசமாகத் தேர்வு செய்யலாம்: அடிப்படை மருத்துவ சேவை, இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு சோதனை, கண் பரிசோதனை, ENT மற்றும் பல் பரிசோதனை, மருத்துவ பதிவுகள் மற்றும் பரிந்துரைகள் டிஜிட்டல் மயமாக்கல், தனிப்பயனாக்கப்பட்ட ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறை திட்டம் மற்றும் சில.

இதில் பயன் பெற பதிவுகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளது; சிறப்பு சேவைகளைப் பயன்படுத்துவதற்கான போக்குவரத்து மருத்துவமனையால் ஏற்பாடு செய்யப்படும். மருத்துவமனைகயின் மக்கள் தொடர்பாளர் பிரிவின் செய்தி குறிப்பு கூறுகிறது.

மேலும் விவரங்களுக்கு – ராமநாதன் லக்ஷ்மணன் / மேலாளர்- செயல்பாடுகள்/ அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனைகள் – எம்.ஆர்.சி நகர் தொலைபேசி எண்: 044 66862000, 6380742387

admin

Recent Posts

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

3 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

3 weeks ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 weeks ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 weeks ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 weeks ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 weeks ago