தமிழ்நாடு அரசு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் வருவாய் மூலமாக கொளத்தூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கியுள்ளது. இந்த கல்லூரிக்கு பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு மாணவர் சேர்க்கையும் தொடங்கப்பட்டுள்ளது.
கல்லூரி தொடங்க வேலைகள் ஆரம்பித்ததிலிருந்து இரண்டு முக்கிய பிரச்சினைகள் பொதுமக்களால் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
முதலாவது இந்த கல்லூரியில் பேராசிரியர்கள் நியமனத்திற்கு இந்து மதத்தை சேர்ந்தவர்களே விண்ணப்பிக்கமுடியும் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இது அனைத்து மதத்திலும் இருக்கும் வழக்கமான நடைமுறைதான் என்று அரசு தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரச்சினை சம்பந்தமாக தனி நபர் ஒருவரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக கோவில் சம்பந்தமான தொழிற் படிப்புகள் இருந்தால் வருமானத்தை செலவு செய்யலாம் என்றும் அதை விடுத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு செலவு செய்ய வேண்டுமா என்று சில சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…
மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…
நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…
1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…