Categories: சமூகம்

கபாலீஸ்வரர் கோவிலின் வருவாய் மூலம் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டதற்கு சமூக ஆர்வலர்களிடம் முரண்பட்ட கருத்துக்கள்

தமிழ்நாடு அரசு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் வருவாய் மூலமாக கொளத்தூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கியுள்ளது. இந்த கல்லூரிக்கு பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு மாணவர் சேர்க்கையும் தொடங்கப்பட்டுள்ளது.

கல்லூரி தொடங்க வேலைகள் ஆரம்பித்ததிலிருந்து இரண்டு முக்கிய பிரச்சினைகள் பொதுமக்களால் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

முதலாவது இந்த கல்லூரியில் பேராசிரியர்கள் நியமனத்திற்கு இந்து மதத்தை சேர்ந்தவர்களே விண்ணப்பிக்கமுடியும் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இது அனைத்து மதத்திலும் இருக்கும் வழக்கமான நடைமுறைதான் என்று அரசு தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரச்சினை சம்பந்தமாக தனி நபர் ஒருவரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக கோவில் சம்பந்தமான தொழிற் படிப்புகள் இருந்தால் வருமானத்தை செலவு செய்யலாம் என்றும் அதை விடுத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு செலவு செய்ய வேண்டுமா என்று சில சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

admin

Recent Posts

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா. மே 21ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 28ல் தேர் திருவிழா.

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…

4 days ago

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சருமான திரு. பி. வெங்கட்ரமணன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…

1 week ago

ஆர். ஏ. புரத்திலுள்ள டாஸ்மாக் ‘எலைட்’ கடையை மூட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை.

ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…

2 weeks ago

மந்தைவெளியில் உள்ள டாஸ்மாக் மது விற்பனைக் கடை நிரந்தரமாக மூடப்பட்டது.

மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…

2 weeks ago

இந்த டிரை கிளீனிங் வாகனம் வீட்டு வாசலுக்கே வந்து சேவை வழங்குகிறது.

உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…

2 weeks ago

தயாராகி வரும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரின் புதிய அலுவலகம்.

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…

2 weeks ago