சென்னை கார்ப்பரேஷன், ஆழ்வார்பேட்டை மேம்பாலம் அருகே வின்னர்ஸ் பேக்கரி பின்புறத்தில் கம்யூனிட்டி கல்லூரியை (சமுதாய கல்லூரி) பல வருடங்களாக நடத்தி வருகின்றனர். இந்த கல்லூரியில் குறுகிய காலத்தில் வேலைவாய்ப்புகளை பெரும் வகையில் பல்வேறு படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியை செவ்வாய்க்கிழமை சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பார்வையிட்டார். இந்த கல்லூரியில் பேக்கரி சம்பந்தமான படிப்புகள் பிரபலம். மேலும் இது தவிர பாரா மெடிக்கல் அசிஸ்டன்ட், ஸ்போக்கன் இங்கிலீஷ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் நடத்தி வருகின்றனர்.
நகரிலிருந்தும் வெளியூர்களிலிருந்து நிறைய பேர் வந்து இங்கு பயின்றுவருகின்றனர். மேலும் பேக்கரி சம்பந்தமான படிப்புக்கு உதவித்தொகையும் வழங்குகின்றனர். இந்த திட்டம் சென்னை மாநகராட்சி, ரோட்டரி கிளப் மற்றும் ஹாட் பிரட்ஸ் மஹாதேவன் நிறுவனத்துடன் இணைந்து இந்த கல்லூரியை நடத்தி வருகின்றனர்.
நீங்கள் இங்கு பேக்கரி மற்றும் இதர படிப்புகளில் சேர விரும்பினால் கல்லூரியை தொடர்பு கொள்ளவும்.
பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…