சென்னை கார்ப்பரேஷன், ஆழ்வார்பேட்டை மேம்பாலம் அருகே வின்னர்ஸ் பேக்கரி பின்புறத்தில் கம்யூனிட்டி கல்லூரியை (சமுதாய கல்லூரி) பல வருடங்களாக நடத்தி வருகின்றனர். இந்த கல்லூரியில் குறுகிய காலத்தில் வேலைவாய்ப்புகளை பெரும் வகையில் பல்வேறு படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியை செவ்வாய்க்கிழமை சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பார்வையிட்டார். இந்த கல்லூரியில் பேக்கரி சம்பந்தமான படிப்புகள் பிரபலம். மேலும் இது தவிர பாரா மெடிக்கல் அசிஸ்டன்ட், ஸ்போக்கன் இங்கிலீஷ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் நடத்தி வருகின்றனர்.
நகரிலிருந்தும் வெளியூர்களிலிருந்து நிறைய பேர் வந்து இங்கு பயின்றுவருகின்றனர். மேலும் பேக்கரி சம்பந்தமான படிப்புக்கு உதவித்தொகையும் வழங்குகின்றனர். இந்த திட்டம் சென்னை மாநகராட்சி, ரோட்டரி கிளப் மற்றும் ஹாட் பிரட்ஸ் மஹாதேவன் நிறுவனத்துடன் இணைந்து இந்த கல்லூரியை நடத்தி வருகின்றனர்.
நீங்கள் இங்கு பேக்கரி மற்றும் இதர படிப்புகளில் சேர விரும்பினால் கல்லூரியை தொடர்பு கொள்ளவும்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…