சென்னை கார்ப்பரேஷன், ஆழ்வார்பேட்டை மேம்பாலம் அருகே வின்னர்ஸ் பேக்கரி பின்புறத்தில் கம்யூனிட்டி கல்லூரியை (சமுதாய கல்லூரி) பல வருடங்களாக நடத்தி வருகின்றனர். இந்த கல்லூரியில் குறுகிய காலத்தில் வேலைவாய்ப்புகளை பெரும் வகையில் பல்வேறு படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியை செவ்வாய்க்கிழமை சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பார்வையிட்டார். இந்த கல்லூரியில் பேக்கரி சம்பந்தமான படிப்புகள் பிரபலம். மேலும் இது தவிர பாரா மெடிக்கல் அசிஸ்டன்ட், ஸ்போக்கன் இங்கிலீஷ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் நடத்தி வருகின்றனர்.
நகரிலிருந்தும் வெளியூர்களிலிருந்து நிறைய பேர் வந்து இங்கு பயின்றுவருகின்றனர். மேலும் பேக்கரி சம்பந்தமான படிப்புக்கு உதவித்தொகையும் வழங்குகின்றனர். இந்த திட்டம் சென்னை மாநகராட்சி, ரோட்டரி கிளப் மற்றும் ஹாட் பிரட்ஸ் மஹாதேவன் நிறுவனத்துடன் இணைந்து இந்த கல்லூரியை நடத்தி வருகின்றனர்.
நீங்கள் இங்கு பேக்கரி மற்றும் இதர படிப்புகளில் சேர விரும்பினால் கல்லூரியை தொடர்பு கொள்ளவும்.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…