கீதாலட்சுமி மற்றும் ரேவதி ஆகியோர் தங்கள் சமூக பணி திட்டத்தை தொடங்கியுள்ளனர்.

ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த இளம் பெண்களான கீதாலட்சுமியும் ரேவதியும் சேர்ந்து சமூக சேவை செய்யும் மனப்பான்மையுடன் சென்னை சிட்டி சென்டர் அருகே உள்ள மீனாம்பாள்புரத்தில் சுமார் முப்பது ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கியுள்ளனர். அடுத்ததாக சாந்தோம் கடற்கரை அருகே உள்ள நொச்சி நகரில் வசிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்ய திட்டங்கள் வகுத்து வருகின்றனர்.

கீதாலட்சுமி கடந்த இருபது வருடங்களாக மாதா சர்ச் சாலையில் ரைட் சாய்ஸ் அகாடமி என்ற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்காக டியூஷன் வகுப்புகள் நடத்தி வருகிறார். இவரது அகாடெமியில் ஏழை மாணவர்களுக்கு மட்டும் இலவசமாக டியூஷன் நடத்தி வந்துள்ளார். பின்பு அந்த ஏழை மாணவர்களின் சூழ்நிலையை அறிந்து அவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு இந்த சேவை செய்வதை தொடங்கியதாக தெரிவிக்கிறார். ரைட் சாய்ஸ் அகாடமியில் டியூஷன் வகுப்புகள் கடந்த ஒருவருடமாக கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆன்லைனில் டியூஷன் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

admin

Recent Posts

தேர்தல் 2026: முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்.

மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…

7 days ago

பணியின்போது உயிரிழந்த Urbaser ஊழியரின் குடும்பத்திற்கு மந்தைவெளிப்பாக்கம் சமூகம் நிதியுதவி

மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…

1 week ago

மந்தமாக நடைபெற்று வரும் நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள்

நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…

1 week ago

Tally-யின் அடிப்படைகள் குறித்த இலவசப் பயிற்சி. ஏழை இளைஞர்களுக்காக. இப்போதே முன் பதிவு செய்யுங்கள்.

1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…

1 week ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் விடையாற்றி விழா ஏப்ரல் 3 முதல் தொடங்குகிறது.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…

2 weeks ago

தேர்தல் 2026: ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார் – பாஜக தேர்தல் பிரச்சாரம்

பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…

2 weeks ago