கீதாலட்சுமி மற்றும் ரேவதி ஆகியோர் தங்கள் சமூக பணி திட்டத்தை தொடங்கியுள்ளனர்.

ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த இளம் பெண்களான கீதாலட்சுமியும் ரேவதியும் சேர்ந்து சமூக சேவை செய்யும் மனப்பான்மையுடன் சென்னை சிட்டி சென்டர் அருகே உள்ள மீனாம்பாள்புரத்தில் சுமார் முப்பது ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கியுள்ளனர். அடுத்ததாக சாந்தோம் கடற்கரை அருகே உள்ள நொச்சி நகரில் வசிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்ய திட்டங்கள் வகுத்து வருகின்றனர்.

கீதாலட்சுமி கடந்த இருபது வருடங்களாக மாதா சர்ச் சாலையில் ரைட் சாய்ஸ் அகாடமி என்ற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்காக டியூஷன் வகுப்புகள் நடத்தி வருகிறார். இவரது அகாடெமியில் ஏழை மாணவர்களுக்கு மட்டும் இலவசமாக டியூஷன் நடத்தி வந்துள்ளார். பின்பு அந்த ஏழை மாணவர்களின் சூழ்நிலையை அறிந்து அவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு இந்த சேவை செய்வதை தொடங்கியதாக தெரிவிக்கிறார். ரைட் சாய்ஸ் அகாடமியில் டியூஷன் வகுப்புகள் கடந்த ஒருவருடமாக கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆன்லைனில் டியூஷன் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

8 hours ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

1 day ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழா: பிப்ரவரி 26 மாலை ‘லக்ன பத்திரிக்கை’ வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…

3 days ago

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

5 days ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

7 days ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

1 week ago