கீதாலட்சுமி மற்றும் ரேவதி ஆகியோர் தங்கள் சமூக பணி திட்டத்தை தொடங்கியுள்ளனர்.

ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த இளம் பெண்களான கீதாலட்சுமியும் ரேவதியும் சேர்ந்து சமூக சேவை செய்யும் மனப்பான்மையுடன் சென்னை சிட்டி சென்டர் அருகே உள்ள மீனாம்பாள்புரத்தில் சுமார் முப்பது ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கியுள்ளனர். அடுத்ததாக சாந்தோம் கடற்கரை அருகே உள்ள நொச்சி நகரில் வசிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்ய திட்டங்கள் வகுத்து வருகின்றனர்.

கீதாலட்சுமி கடந்த இருபது வருடங்களாக மாதா சர்ச் சாலையில் ரைட் சாய்ஸ் அகாடமி என்ற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்காக டியூஷன் வகுப்புகள் நடத்தி வருகிறார். இவரது அகாடெமியில் ஏழை மாணவர்களுக்கு மட்டும் இலவசமாக டியூஷன் நடத்தி வந்துள்ளார். பின்பு அந்த ஏழை மாணவர்களின் சூழ்நிலையை அறிந்து அவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு இந்த சேவை செய்வதை தொடங்கியதாக தெரிவிக்கிறார். ரைட் சாய்ஸ் அகாடமியில் டியூஷன் வகுப்புகள் கடந்த ஒருவருடமாக கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆன்லைனில் டியூஷன் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

admin

Recent Posts

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

1 week ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

1 week ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

2 weeks ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

2 weeks ago

பாரதிய வித்யா பவனின் மார்கழி இசை விழா நவம்பர் 20ல் தொடங்குகிறது.

பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…

2 weeks ago

ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேகம் நவம்பர் 23ல்.

மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…

2 weeks ago