லஸ் சந்திப்பு அருகே உள்ள நவசக்தி பிள்ளையார் கோவிலில் கொரோனா தொற்று காலங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.
கோயிலில் அடுத்த வாரம் முழுவதும் ஒவ்வொரு மாலையும் பெரிய இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
திங்கள்கிழமை (ஆகஸ்ட் 29) மாலை, பட்டிமன்றம் – பிரபல பட்டிமன்றம் நீதிபதி கே.ஞானசம்பந்தன் தொகுத்து வழங்குகிறார். செவ்வாய்கிழமை மாலை, பாரதி பாஸ்கர் விநாயகரின் மகத்துவம் குறித்து 90 நிமிட உரையை வழங்குகிறார். விநாயகர் சதுர்த்தியையொட்டி புதன்கிழமை (ஆக. 31) வீரமணி ராஜு குழுவினரின் பக்திப் பாடல்கள் கச்சேரி மூன்று மணி நேரம் நடைபெறுகிறது.
செப்டம்பர் 1ம் தேதி புஷ்பவனம் குப்புசுவாமி மற்றும் அவரது மனைவி அனிதாவின் பக்தி கச்சேரி நடக்கிறது. வெள்ளிக்கிழமை மாலை நித்யஸ்ரீ மகாதேவன் கச்சேரியும், அடுத்த சனிக்கிழமை ராஜேஷ் வைத்தியாவின் வீணை கச்சேரியும் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும்
வெள்ளிக்கிழமை ஊஞ்சல் உற்சவத்தை மக்கள் கண்டு மகிழலாம். ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 4) இரவு 9 மணிக்குத் தொடங்கும் விநாயகப் பெருமானின் வீதி ஊர்வலத்துடன் ஏழு நாட்கள் நடைபெற்று வந்த உற்சவம் முடிவடையும்.
செய்தி : எஸ்.பிரபு
இங்கு இடம்பெற்றுள்ள புகைப்படம் கடந்த ஆண்டு எடுக்கப்பட்டது
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…