லஸ் சந்திப்பு அருகே உள்ள நவசக்தி பிள்ளையார் கோவிலில் கொரோனா தொற்று காலங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.
கோயிலில் அடுத்த வாரம் முழுவதும் ஒவ்வொரு மாலையும் பெரிய இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
திங்கள்கிழமை (ஆகஸ்ட் 29) மாலை, பட்டிமன்றம் – பிரபல பட்டிமன்றம் நீதிபதி கே.ஞானசம்பந்தன் தொகுத்து வழங்குகிறார். செவ்வாய்கிழமை மாலை, பாரதி பாஸ்கர் விநாயகரின் மகத்துவம் குறித்து 90 நிமிட உரையை வழங்குகிறார். விநாயகர் சதுர்த்தியையொட்டி புதன்கிழமை (ஆக. 31) வீரமணி ராஜு குழுவினரின் பக்திப் பாடல்கள் கச்சேரி மூன்று மணி நேரம் நடைபெறுகிறது.
செப்டம்பர் 1ம் தேதி புஷ்பவனம் குப்புசுவாமி மற்றும் அவரது மனைவி அனிதாவின் பக்தி கச்சேரி நடக்கிறது. வெள்ளிக்கிழமை மாலை நித்யஸ்ரீ மகாதேவன் கச்சேரியும், அடுத்த சனிக்கிழமை ராஜேஷ் வைத்தியாவின் வீணை கச்சேரியும் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும்
வெள்ளிக்கிழமை ஊஞ்சல் உற்சவத்தை மக்கள் கண்டு மகிழலாம். ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 4) இரவு 9 மணிக்குத் தொடங்கும் விநாயகப் பெருமானின் வீதி ஊர்வலத்துடன் ஏழு நாட்கள் நடைபெற்று வந்த உற்சவம் முடிவடையும்.
செய்தி : எஸ்.பிரபு
இங்கு இடம்பெற்றுள்ள புகைப்படம் கடந்த ஆண்டு எடுக்கப்பட்டது
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…