லஸ் சந்திப்பு அருகே உள்ள நவசக்தி பிள்ளையார் கோவிலில் கொரோனா தொற்று காலங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.
கோயிலில் அடுத்த வாரம் முழுவதும் ஒவ்வொரு மாலையும் பெரிய இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
திங்கள்கிழமை (ஆகஸ்ட் 29) மாலை, பட்டிமன்றம் – பிரபல பட்டிமன்றம் நீதிபதி கே.ஞானசம்பந்தன் தொகுத்து வழங்குகிறார். செவ்வாய்கிழமை மாலை, பாரதி பாஸ்கர் விநாயகரின் மகத்துவம் குறித்து 90 நிமிட உரையை வழங்குகிறார். விநாயகர் சதுர்த்தியையொட்டி புதன்கிழமை (ஆக. 31) வீரமணி ராஜு குழுவினரின் பக்திப் பாடல்கள் கச்சேரி மூன்று மணி நேரம் நடைபெறுகிறது.
செப்டம்பர் 1ம் தேதி புஷ்பவனம் குப்புசுவாமி மற்றும் அவரது மனைவி அனிதாவின் பக்தி கச்சேரி நடக்கிறது. வெள்ளிக்கிழமை மாலை நித்யஸ்ரீ மகாதேவன் கச்சேரியும், அடுத்த சனிக்கிழமை ராஜேஷ் வைத்தியாவின் வீணை கச்சேரியும் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும்
வெள்ளிக்கிழமை ஊஞ்சல் உற்சவத்தை மக்கள் கண்டு மகிழலாம். ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 4) இரவு 9 மணிக்குத் தொடங்கும் விநாயகப் பெருமானின் வீதி ஊர்வலத்துடன் ஏழு நாட்கள் நடைபெற்று வந்த உற்சவம் முடிவடையும்.
செய்தி : எஸ்.பிரபு
இங்கு இடம்பெற்றுள்ள புகைப்படம் கடந்த ஆண்டு எடுக்கப்பட்டது
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…