கன்னியாஸ்திரிகளால் சாந்தோமில் நடத்தப்படும் ஹோம் நர்சிங் படிப்பு

சாந்தோம் அருகே செயின்ட் ரபேல்ஸ் பள்ளி உள்ளது. இந்த பள்ளியை கிறித்தவ மதத்தை சேர்ந்த பெண் சகோதரிகள் சேர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த பள்ளியில் இரண்டு சகோதரிகள் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இதை கடந்த மார்ச் மாதத்திலிருந்து தொடங்கியுள்ளனர். இது தவிர மகளிரின் மேம்பாட்டுக்கும் திருநங்கைகளுக்கும் அவர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளனர்.

தற்போது ஆதரவில்லாமல் வாழ்ந்து வரும் மகளிர்க்கு மூன்று மாத ஹோம் நர்சிங் படிப்பை தொடங்கியுள்ளனர். இந்த ஹோம் நர்சிங் படிப்பு வீட்டிலுள்ள நோயால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களின் வசதிக்காக தொடங்கப்பட்டது. இரண்டு நன்கு பயிற்சி பெற்ற மூத்த நர்ஸ்களை வைத்து இந்த படிப்பை ரபேல்ஸ் பள்ளி வளாகத்தில் நடத்துகின்றனர். பயிற்சி முடிந்தவுடன் கொஞ்ச நாட்களுக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் நர்சிங் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி முடிந்தவுடன் அவர்களுக்கு பணி வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இது போன்ற ஹோம் நர்ஸ் பணிக்கு தேவைகள் அதிகமாக இருப்பதாகவும் மாத சம்பளம் இருபதாயிரம் வரை பெற வாய்ப்பிருப்பதாகவும் சகோதரி பிலோ தெரிவிக்கிறார்.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

1 day ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

2 days ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

2 days ago

திருவேங்கடம் சாலை சீரமைக்கப்பட்டது: ஆனால் சாலை சந்திப்பு மற்றும் தேவநாதன் தெரு ஆகிய இடங்களில் இன்னும் வேலை முடியவில்லை.

மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…

2 days ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஜி.சி.சி.யின் மறுசுழற்சி பொருட்கள் சேமிக்கும் இடத்தில் தீ விபத்து.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…

3 days ago

நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்.

பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…

6 days ago