சாந்தோம் அருகே செயின்ட் ரபேல்ஸ் பள்ளி உள்ளது. இந்த பள்ளியை கிறித்தவ மதத்தை சேர்ந்த பெண் சகோதரிகள் சேர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த பள்ளியில் இரண்டு சகோதரிகள் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இதை கடந்த மார்ச் மாதத்திலிருந்து தொடங்கியுள்ளனர். இது தவிர மகளிரின் மேம்பாட்டுக்கும் திருநங்கைகளுக்கும் அவர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளனர்.
தற்போது ஆதரவில்லாமல் வாழ்ந்து வரும் மகளிர்க்கு மூன்று மாத ஹோம் நர்சிங் படிப்பை தொடங்கியுள்ளனர். இந்த ஹோம் நர்சிங் படிப்பு வீட்டிலுள்ள நோயால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களின் வசதிக்காக தொடங்கப்பட்டது. இரண்டு நன்கு பயிற்சி பெற்ற மூத்த நர்ஸ்களை வைத்து இந்த படிப்பை ரபேல்ஸ் பள்ளி வளாகத்தில் நடத்துகின்றனர். பயிற்சி முடிந்தவுடன் கொஞ்ச நாட்களுக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் நர்சிங் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி முடிந்தவுடன் அவர்களுக்கு பணி வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இது போன்ற ஹோம் நர்ஸ் பணிக்கு தேவைகள் அதிகமாக இருப்பதாகவும் மாத சம்பளம் இருபதாயிரம் வரை பெற வாய்ப்பிருப்பதாகவும் சகோதரி பிலோ தெரிவிக்கிறார்.
மாநில மதுபான வர்த்தக நிறுவனமான டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி மதிப்பிலான மோசடி தொடர்பான விசாரணை தொடர்பாக, ஆர்.ஏ. புரத்தில் உள்ள…
அந்தி பொழுதில் பி.எஸ். பள்ளி மண்டலத்தில் உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில் நீங்கள் நடந்து சென்றால், நன்கு ஒளிரும் பசுமை…
கற்பகதாசன் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தும் அமெரிக்க ஒன்றியத்தில் பயிற்சி பெற்ற ஒவ்வாமை நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன், தான் எழுதிய பக்தி…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சீனியர் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தனது மாணவர்களுக்கான சமூக சேவை நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய…
மந்தைவெளியை மையமாகக் கொண்ட அகில இந்திய Boufuugai Inshinryu மையம் 25வது பிளாக் பெல்ட் பயிற்சி முகாமை வெற்றிகரமாக முடித்துள்ளதாகக்…
வார்டு 126 ஐ (மந்தைவெளிப்பாக்கம் / மெரினா குப்பம் மண்டலங்களின் ஒரு பகுதி) பிரதிநிதித்துவப்படுத்தும் கவுன்சிலர் அமிர்த வர்ஷினி (காங்கிரஸ்)…