உங்கள் வீட்டருகே உள்ள சாலை சரியான முறையில் போடப்படுகிறதா? விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் பகுதியில் மாநகராட்சியின் சார்பாக சாலை அமைக்கும் பணி நடைபெற்றால், சாலை போடும் ஒப்பந்ததாரர் பழைய சாலையை சுமார் 4 செ.மீ அளவுக்கு சுரண்டி எடுக்க வேண்டும், அதன் பின்னரே புதியதாக சாலை அமைக்க வேண்டும். தற்போது மந்தைவெளிபாக்கத்தில் பெரும்பாலான சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. மந்தைவெளிப்பாக்கத்தில் வசிக்கும் சமூக ஆர்வலர் சி.ஆர்.பாலாஜி இது போன்ற சேவைகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இவர் தற்போது உள்ளூர் பகுதிகளில் நடக்கும் சாலை பணிகளை பார்வையிட்டு சாலை சரியாக 4செ.மீ உயரத்திற்கு வெட்டியெடுக்கப்பட்டு போடப்படுகிறதா என்று ஆய்வுசெய்கிறார். மேலும் இந்த அளவுப்படி போடாத சாலைகள் சம்பந்தமாக மாநகராட்சியின் உதவி செயற்பொறியாளரிடம் தெரிவிக்கிறார்.

உங்கள் பகுதிகளில் இதுபோன்று சென்னை மாநகராட்சியால் சாலை பணிகள் நடைபெற்றால் நீங்கள் அங்கு சென்று இந்த அளவீட்டு முறைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு சாலை பணிகள் நடைபெறுகிறதா என்று உறுதிபடுத்தி கொள்ளுங்கள். இல்லையென்றால் சாலை உயரமாக அமைந்துவிடும், அவ்வாறு அமைந்தால் மழைக்காலங்களில் சாலைகளில் பொழியும் மழை நீர் வீட்டுக்குள் வருவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.

இந்த பணிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டும் சிலர் தங்களுடைய வாகனங்களை சாலை அமைக்கும் பணிகளுக்கு இடையூறாக சாலைகளிலேயே நிறுத்தியிருகின்றனர், அவ்வாறு நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்துவார்கள் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

3 days ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

3 days ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

4 days ago

திருவேங்கடம் சாலை சீரமைக்கப்பட்டது: ஆனால் சாலை சந்திப்பு மற்றும் தேவநாதன் தெரு ஆகிய இடங்களில் இன்னும் வேலை முடியவில்லை.

மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…

4 days ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஜி.சி.சி.யின் மறுசுழற்சி பொருட்கள் சேமிக்கும் இடத்தில் தீ விபத்து.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…

5 days ago

நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்.

பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…

1 week ago