செய்திகள்

உங்கள் வீட்டருகே உள்ள சாலை சரியான முறையில் போடப்படுகிறதா? விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் பகுதியில் மாநகராட்சியின் சார்பாக சாலை அமைக்கும் பணி நடைபெற்றால், சாலை போடும் ஒப்பந்ததாரர் பழைய சாலையை சுமார் 4 செ.மீ அளவுக்கு சுரண்டி எடுக்க வேண்டும், அதன் பின்னரே புதியதாக சாலை அமைக்க வேண்டும். தற்போது மந்தைவெளிபாக்கத்தில் பெரும்பாலான சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. மந்தைவெளிப்பாக்கத்தில் வசிக்கும் சமூக ஆர்வலர் சி.ஆர்.பாலாஜி இது போன்ற சேவைகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இவர் தற்போது உள்ளூர் பகுதிகளில் நடக்கும் சாலை பணிகளை பார்வையிட்டு சாலை சரியாக 4செ.மீ உயரத்திற்கு வெட்டியெடுக்கப்பட்டு போடப்படுகிறதா என்று ஆய்வுசெய்கிறார். மேலும் இந்த அளவுப்படி போடாத சாலைகள் சம்பந்தமாக மாநகராட்சியின் உதவி செயற்பொறியாளரிடம் தெரிவிக்கிறார்.

உங்கள் பகுதிகளில் இதுபோன்று சென்னை மாநகராட்சியால் சாலை பணிகள் நடைபெற்றால் நீங்கள் அங்கு சென்று இந்த அளவீட்டு முறைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு சாலை பணிகள் நடைபெறுகிறதா என்று உறுதிபடுத்தி கொள்ளுங்கள். இல்லையென்றால் சாலை உயரமாக அமைந்துவிடும், அவ்வாறு அமைந்தால் மழைக்காலங்களில் சாலைகளில் பொழியும் மழை நீர் வீட்டுக்குள் வருவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.

இந்த பணிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டும் சிலர் தங்களுடைய வாகனங்களை சாலை அமைக்கும் பணிகளுக்கு இடையூறாக சாலைகளிலேயே நிறுத்தியிருகின்றனர், அவ்வாறு நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்துவார்கள் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

admin

Recent Posts

மயிலாப்பூரில் நடைபெற்ற மகாராஷ்டிர தின நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…

4 hours ago

எம்.எல்.ஏ., ஸ்பான்சர்களுடன் சேர்ந்து, பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாமை நடத்துகிறார்.

மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…

8 hours ago

கோலங்கள் பற்றிய விரிவுரை. ஆர்.ஏ.புரத்தில் உள்ள கம்யூனிட்டி கிளப் நடத்தியது

சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…

1 day ago

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயிண்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் விடுமுறை பைபிள் பள்ளி

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…

1 day ago

மாதவப்பெருமாள் கோவிலில் சித்திரை திருவோணப் பெருவிழா – ஏப்ரல் 30 முதல் மே 10 வரை.

மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…

2 days ago

பி.எஸ்.மெட்ரிக் பள்ளியில் (வடக்கு) இந்த கல்வியாண்டு முதல் 11 ஆம் வகுப்பில் வணிகவியல் பாடம் அறிமுகம்.

மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…

2 days ago