சாந்தோம் அம்மா உணவகம் அருகே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உருவாக்கப்பட்டது இன்பினிட்டி பூங்கா. இந்த பூங்காவில் பன்னிரெண்டு வயது வரை உள்ள குழந்தைகளே அனுமதிக்கப்படுவர். இந்த பூங்காவின் சிறப்பு என்னவென்றால் இங்குள்ள விளையாட்டு திடல்கள் மற்றும் மற்ற விளையாட்டு பொருட்கள் அனைத்தும் முழுக்க முழுக்க மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கென வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவிற்கு மயிலாப்பூர் பகுதி குழந்தைகள் தவிர மந்தைவெளி, அடையார் மற்றும் ராயப்பேட்டை பகுதிகளிலிருந்தும் குழந்தைகள் வருகின்றனர். இந்த பூங்காவை அப்பாசாமி பில்டர்ஸ் நிர்வகித்து வருகின்றனர். இந்த பூங்காவை பராமரிக்கவும் மற்றும் பன்னிரெண்டு வயதிற்கு மேற்பட்டோர் பூங்காவில் நுழையாமல் தடுக்கவும் தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள். மந்தைவெளிபாக்கம் பகுதியில் வசிப்பவர்கள் தன்னார்வலர்களாக பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் பூங்கா காவலரை அணுகலாம். இந்த பூங்கா சாந்தோம் அம்மா உணவகம் பின்புறத்தில் உள்ளது.
இதுபோன்ற பூங்கா விரைவில் கோட்டூர்புரத்திலும் மற்றும் நொளம்பூர் பகுதியிலும் திறக்கப்படவுள்ளது.
64 ஸ்கொயர்ஸ் செஸ் அகாடமி, மே 31 சனிக்கிழமை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி சென்டர்…
மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மே 30 வரை…
மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கடை…
மயிலாப்பூரில் இன்று காலை வழி தவறி, மயிலாப்பூர் குடியிருப்பாளர்களின் தளங்களில் ஆன்லைனில் பகிரப்பட்ட செய்திகளால் ‘காணாமல் போனதாக’ அறிவிக்கப்பட்ட முதியவர்…
இந்த புதன்கிழமை நண்பகல் முதல் ‘நபர் காணவில்லை’ என்ற ஆன்லைன் செய்தி பரவி வருகிறது. இதுதான் செய்தி – மந்தைவெளிப்பாக்கம்…
மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…