மந்தைவெளிபாக்கத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கென உருவாக்கப்பட்ட இன்பினிட்டி பூங்கா தற்போது மீண்டும் திறப்பு

சாந்தோம் அம்மா உணவகம் அருகே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உருவாக்கப்பட்டது இன்பினிட்டி பூங்கா. இந்த பூங்காவில் பன்னிரெண்டு வயது வரை உள்ள குழந்தைகளே அனுமதிக்கப்படுவர். இந்த பூங்காவின் சிறப்பு என்னவென்றால் இங்குள்ள விளையாட்டு திடல்கள் மற்றும் மற்ற விளையாட்டு பொருட்கள் அனைத்தும் முழுக்க முழுக்க மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கென வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பூங்காவிற்கு மயிலாப்பூர் பகுதி குழந்தைகள் தவிர மந்தைவெளி, அடையார் மற்றும் ராயப்பேட்டை பகுதிகளிலிருந்தும் குழந்தைகள் வருகின்றனர். இந்த பூங்காவை அப்பாசாமி பில்டர்ஸ் நிர்வகித்து வருகின்றனர். இந்த பூங்காவை பராமரிக்கவும் மற்றும் பன்னிரெண்டு வயதிற்கு மேற்பட்டோர் பூங்காவில் நுழையாமல் தடுக்கவும் தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள். மந்தைவெளிபாக்கம் பகுதியில் வசிப்பவர்கள் தன்னார்வலர்களாக பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் பூங்கா காவலரை அணுகலாம். இந்த பூங்கா சாந்தோம் அம்மா உணவகம் பின்புறத்தில் உள்ளது.

இதுபோன்ற பூங்கா விரைவில் கோட்டூர்புரத்திலும் மற்றும் நொளம்பூர் பகுதியிலும் திறக்கப்படவுள்ளது.

admin

Recent Posts

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

2 weeks ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

2 weeks ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

3 weeks ago

பாரதிய வித்யா பவனின் மார்கழி இசை விழா நவம்பர் 20ல் தொடங்குகிறது.

பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…

3 weeks ago

ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேகம் நவம்பர் 23ல்.

மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…

3 weeks ago