சென்னை மெட்ரோ மந்தைவெளி பகுதியில் தடுப்புகள் அமைத்து முதல் கட்ட பணிகளை தொடங்கவுள்ளனர். இந்த ரயில் பாதை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி லஸ்ஸிலிருந்து மந்தைவெளி ஆர்.ஏ. புரம் வழியாக அடையாறு நோக்கி செல்கிறது. இந்த மெட்ரோ வேலைக்கு தோண்டும் போது நிறைய கட்டிடங்கள் பாதிக்கப்படலாம். ஆர்.கே மட சாலையில் நெருக்கம் அதிகமாக உள்ளதால் சில பகுதிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
சமீபத்திய காலங்களில், மெட்ரோ நிர்வாகம் தங்களது ஊழியர்கள் மூலம் இந்த ஆர்.கே.மட சாலையில் உள்ள அனைத்து சொத்துக்களின் விவரங்களை சேகரித்தது. சுவர்களில் விரிசல் / அடித்தளத்தின் வலிமை போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டது.
சில குடியிருப்பாளர்கள் அவர்களை வீடுகளில் நுழைய அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.
சொத்தின் நிலை குறித்த எந்தப் பதிவும் உங்களிடம் இல்லையென்றால், சில சிக்கல்கள் பின்னர் ஏற்பட்டால், மெட்ரோ நிறுவனம் விதிகள் பற்றிய விவரங்களை உங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இழப்பீடு வழங்கப்படுகிறதா அல்லது பழுதுபார்ப்பு இலவசமாக மேற்கொள்ளப்படுகிறதா?
மயிலாப்பூர் டைம்ஸ் மெட்ரோ ரயில் பாதை செயல்படும் சில பகுதிகளில் இந்த பிரச்சினைகள் எவ்வாறு கையாளப்படுகிறது என்று உங்களுக்கு வரும் காலங்களில் தெரிவிக்க உள்ளது.
File Photo
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…