மயிலாப்பூரில் உள்ள ஜெயின் சமூகத்தினர் பகவான் மகாவீரரின் 2622வது ஜென்ம கல்யாணக் மஹோத்ஸவை கொண்டாடுகின்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஜெயின் சமூகத்தினர் ஒன்று கூடி பகவான் மகாவீரின் 2622வது ஜென்ம கல்யாணக் மஹோத்ஸவைக் கொண்டாடுகின்றனர்.

இந்நிகழ்ச்சி மயிலாப்பூர் பஜார் சாலையில் உள்ள ஜெயின் ஸ்தானக் வளாகத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெறுகிறது.

நாள் முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சி பிரார்த்தனையுடன் தொடங்குகிறது. பின்னர் சமூக அடிப்படையிலான நிகழ்வுகள் – இந்த கோடைகாலத்திற்கான குடிநீர் பந்தல் திறப்பு, அன்னதானம் மற்றும் மோர் மற்றும் லட்டு விநியோகிக்கப்படவுள்ளது.

அன்று மதியம், சமூக நலத் திட்டங்களின் முறையான துவக்கம் இருக்கும்.

மயிலாப்பூர் அருண்டெல் தெருவில் உள்ள ஜாவன்ட்முல் சோர்டியா நோயறிதல் மையத்தில் ஆலோசனை பெறும் நபர்களுக்கு அன்றைய நாளுக்கான டயாலிசிஸ் சிகிச்சைக்கு இந்த சமூகம் நிதியளிக்கிறது.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவிற்கு மரச்சாமான்கள் வழங்கப்பட உள்ளது.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வர்தமான் ஸ்வேதாம்பர் ஸ்தானக்வாசி ஜெயின் சங்கம் மற்றும் மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ எஸ்.எஸ். ஜெயின் யுவக் சங்கம் ஆகியவை இந்த நாட்களின் நிகழ்வை ஆதவளிக்கின்றன.

யுவக் சங்கத்தின் தலைவர் ஜி.சஞ்சய் சேத்தியா கூறுகையில், இது ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வு என்றும், மயிலாப்பூரில் உள்ள சமூகம் இந்த நிகழ்வைக் கொண்டாட கைகோர்ப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் விவரங்களுக்கு சேத்தியாவின் தொலைபேசி எண் – 7010945847

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago