மயிலாப்பூரில் உள்ள ஜெயின் சமூகத்தினர் பகவான் மகாவீரரின் 2622வது ஜென்ம கல்யாணக் மஹோத்ஸவை கொண்டாடுகின்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஜெயின் சமூகத்தினர் ஒன்று கூடி பகவான் மகாவீரின் 2622வது ஜென்ம கல்யாணக் மஹோத்ஸவைக் கொண்டாடுகின்றனர்.

இந்நிகழ்ச்சி மயிலாப்பூர் பஜார் சாலையில் உள்ள ஜெயின் ஸ்தானக் வளாகத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெறுகிறது.

நாள் முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சி பிரார்த்தனையுடன் தொடங்குகிறது. பின்னர் சமூக அடிப்படையிலான நிகழ்வுகள் – இந்த கோடைகாலத்திற்கான குடிநீர் பந்தல் திறப்பு, அன்னதானம் மற்றும் மோர் மற்றும் லட்டு விநியோகிக்கப்படவுள்ளது.

அன்று மதியம், சமூக நலத் திட்டங்களின் முறையான துவக்கம் இருக்கும்.

மயிலாப்பூர் அருண்டெல் தெருவில் உள்ள ஜாவன்ட்முல் சோர்டியா நோயறிதல் மையத்தில் ஆலோசனை பெறும் நபர்களுக்கு அன்றைய நாளுக்கான டயாலிசிஸ் சிகிச்சைக்கு இந்த சமூகம் நிதியளிக்கிறது.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவிற்கு மரச்சாமான்கள் வழங்கப்பட உள்ளது.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வர்தமான் ஸ்வேதாம்பர் ஸ்தானக்வாசி ஜெயின் சங்கம் மற்றும் மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ எஸ்.எஸ். ஜெயின் யுவக் சங்கம் ஆகியவை இந்த நாட்களின் நிகழ்வை ஆதவளிக்கின்றன.

யுவக் சங்கத்தின் தலைவர் ஜி.சஞ்சய் சேத்தியா கூறுகையில், இது ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வு என்றும், மயிலாப்பூரில் உள்ள சமூகம் இந்த நிகழ்வைக் கொண்டாட கைகோர்ப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் விவரங்களுக்கு சேத்தியாவின் தொலைபேசி எண் – 7010945847

Verified by ExactMetrics