கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் அறுபத்து மூவர் திருவிழா ஊர்வலம் நேற்று நடைபெற்றது. கொரோனா காரணமாக சில விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது. வழக்கமாக பங்குனி திருவிழாவின்போது மயிலாப்பூரின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சாமிகள் ஊர்வலத்தில் வரும். ஆனால் இந்த வருடம் கோலவிழியம்மன் மட்டுமே ஊர்வலத்தில் கலந்து கொண்டது. ஊர்வலம் இரண்டு மணி நேரத்திற்குள்ளேயே அறுபத்து மூவர் ஊர்வலம் முடிந்தது. இந்த முறை தேர் திருவிழாவிற்கு வந்த கூட்டத்தை விட அறுபத்து மூவர் விழாவிற்கு குறைவான கூட்டமே வந்தது. இந்த முறை கடைகள் நடத்தவும் மற்றும் அன்னதானம் வழங்கவும் தடை செய்யப்பட்டது. மேலும் அவ்வப்போது மக்களுக்கு முகக்கவசங்கள் அணிய வற்புறுத்தப்பட்டது.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…