சென்னை மாநகராட்சியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட கோவிட் தொழிலாளர்கள், ஏப்ரல் 2020 முதல், சுமார் 17 மாதங்களுக்கு மேலாக ஆர்.ஏ.புரத்தின் அனைத்து பகுதிகளிலும் சேவை செய்த பிறகு ஆகஸ்ட் மாத கடைசி நாளில் விடைபெற்றனர்.
காமராஜ் சாலையின் கடைசி முனையில் உள்ள சென்னை மாநகராட்சியின் தர்மாம்பாள் பூங்காவில் இந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு விழா எடுக்கப்பட்டது. கேக்குகள் வெட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. இந்த பூங்காவில்தான் இந்த தொழிலாளர்களுக்கு கோவிட் நேரத்தில் ஒவ்வொரு நாளும் பயிற்சிகள் மற்றும் பணிகள் சம்பந்தமாக கூட்டங்கள் நடைபெறும்.
“இது ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பம், ஆனால் நம்மில் பலர் வேறு வேலை நியமனம் பெறுவது பற்றி யோசித்தோம்” என்று பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு மூத்த கோவிட் தொழிலாளி தீபா கூறினார்.
கோவிட் நேரத்தில் வருமானமில்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த எங்களுக்கு வழங்கப்பட்ட இந்த பணி மிகவும் பயனுள்ளதாக இருந்தது, என்று HR படித்த தீபா கூறினார். மேலும் அடுத்து வரும் காலங்களில் சில NGOs அல்லது கார்ப்பரேஷன் எங்களுக்கு மேலும் பணிகள் வழங்கிடும் என்று நம்புவதாக தீபா கூறுகிறார்.
ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் 20/30 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் மயிலாப்பூர் மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பல்வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்டனர்,
கோவிட் நேரத்தில் சிலருக்கு சவாலான வேலைகள் வழங்கப்பட்டது, இந்த பணி சிலருக்கு சமூகத்திடையே நல்லுறவை ஏற்படுத்தியது, தடுப்பூசி போட சொன்னதால் சிலர் மக்களால் விரட்டப்பட்டனர். இந்த கடினமான சூழ்நிலையில் சிலர் திறமையாக வேலைசெய்தனர்.
2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கொரோனா தொற்று மோசமாக தாக்கிய கேவிபி கார்டன்ஸ் போன்ற பகுதிகளில் பணிபுரிந்தவர்கள், ஆர் ஏ புரத்தின் மிகவும் நெரிசல் மிகுந்த பகுதியில் பணிபுரிந்தவர்கள் தொற்று பாதித்து பெரும் சவால்களை எதிர்கொண்டனர்.
ஒரு கட்டத்தில், தொழிலாளர்கள் குழு 175 க்கும் மேல் இருந்தது. அவர்களுக்கு குடியிருப்பாளர்கள், என்ஜிஓக்கள் மற்றும் மயிலாப்பூர் எம்எல்ஏ ஆகியோர்ஒரு கப் தேநீர் அல்லது காலை உணவை வழங்கினர். சமீபத்திய வாரங்களில், சென்னை மாநகராட்சி கோவிட் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 30 ஆக குறைத்தது.
தொற்றுநோய் வேகமாக பரவி வந்த போது இந்த தொழிலாளர்களுடன் நீங்கள் தொடர்பு கொண்டு உதவி செய்தீர்களா? உங்கள் அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்!
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…