ஆர்.ஏ.புரத்தில் விடை பெற்ற கோவிட் ஒப்பந்த தொழிலாளர்கள்.

சென்னை மாநகராட்சியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட கோவிட் தொழிலாளர்கள், ஏப்ரல் 2020 முதல், சுமார் 17 மாதங்களுக்கு மேலாக ஆர்.ஏ.புரத்தின் அனைத்து பகுதிகளிலும் சேவை செய்த பிறகு ஆகஸ்ட் மாத கடைசி நாளில் விடைபெற்றனர்.

காமராஜ் சாலையின் கடைசி முனையில் உள்ள சென்னை மாநகராட்சியின் தர்மாம்பாள் பூங்காவில் இந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு விழா எடுக்கப்பட்டது. கேக்குகள் வெட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. இந்த பூங்காவில்தான் இந்த தொழிலாளர்களுக்கு கோவிட் நேரத்தில் ஒவ்வொரு நாளும் பயிற்சிகள் மற்றும் பணிகள் சம்பந்தமாக கூட்டங்கள் நடைபெறும்.

“இது ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பம், ஆனால் நம்மில் பலர் வேறு வேலை நியமனம் பெறுவது பற்றி யோசித்தோம்” என்று பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு மூத்த கோவிட் தொழிலாளி தீபா கூறினார்.

கோவிட் நேரத்தில் வருமானமில்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த எங்களுக்கு வழங்கப்பட்ட இந்த பணி மிகவும் பயனுள்ளதாக இருந்தது, என்று HR படித்த தீபா கூறினார். மேலும் அடுத்து வரும் காலங்களில் சில NGOs அல்லது கார்ப்பரேஷன் எங்களுக்கு மேலும் பணிகள் வழங்கிடும் என்று நம்புவதாக தீபா கூறுகிறார்.

ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் 20/30 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் மயிலாப்பூர் மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பல்வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்டனர்,

கோவிட் நேரத்தில் சிலருக்கு சவாலான வேலைகள் வழங்கப்பட்டது, இந்த பணி சிலருக்கு சமூகத்திடையே நல்லுறவை ஏற்படுத்தியது, தடுப்பூசி போட சொன்னதால் சிலர் மக்களால் விரட்டப்பட்டனர். இந்த கடினமான சூழ்நிலையில் சிலர் திறமையாக வேலைசெய்தனர்.

2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கொரோனா தொற்று மோசமாக தாக்கிய கேவிபி கார்டன்ஸ் போன்ற பகுதிகளில் பணிபுரிந்தவர்கள், ஆர் ஏ புரத்தின் மிகவும் நெரிசல் மிகுந்த பகுதியில் பணிபுரிந்தவர்கள் தொற்று பாதித்து பெரும் சவால்களை எதிர்கொண்டனர்.

ஒரு கட்டத்தில், தொழிலாளர்கள் குழு 175 க்கும் மேல் இருந்தது. அவர்களுக்கு குடியிருப்பாளர்கள், என்ஜிஓக்கள் மற்றும் மயிலாப்பூர் எம்எல்ஏ ஆகியோர்ஒரு கப் தேநீர் அல்லது காலை உணவை வழங்கினர். சமீபத்திய வாரங்களில், சென்னை மாநகராட்சி கோவிட் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 30 ஆக குறைத்தது.

தொற்றுநோய் வேகமாக பரவி வந்த போது இந்த தொழிலாளர்களுடன் நீங்கள் தொடர்பு கொண்டு உதவி செய்தீர்களா? உங்கள் அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்!

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

13 hours ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

2 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழா: பிப்ரவரி 26 மாலை ‘லக்ன பத்திரிக்கை’ வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…

3 days ago

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

5 days ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

1 week ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

1 week ago