சென்னை மாநகராட்சியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட கோவிட் தொழிலாளர்கள், ஏப்ரல் 2020 முதல், சுமார் 17 மாதங்களுக்கு மேலாக ஆர்.ஏ.புரத்தின் அனைத்து பகுதிகளிலும் சேவை செய்த பிறகு ஆகஸ்ட் மாத கடைசி நாளில் விடைபெற்றனர்.
காமராஜ் சாலையின் கடைசி முனையில் உள்ள சென்னை மாநகராட்சியின் தர்மாம்பாள் பூங்காவில் இந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு விழா எடுக்கப்பட்டது. கேக்குகள் வெட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. இந்த பூங்காவில்தான் இந்த தொழிலாளர்களுக்கு கோவிட் நேரத்தில் ஒவ்வொரு நாளும் பயிற்சிகள் மற்றும் பணிகள் சம்பந்தமாக கூட்டங்கள் நடைபெறும்.
“இது ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பம், ஆனால் நம்மில் பலர் வேறு வேலை நியமனம் பெறுவது பற்றி யோசித்தோம்” என்று பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு மூத்த கோவிட் தொழிலாளி தீபா கூறினார்.
கோவிட் நேரத்தில் வருமானமில்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த எங்களுக்கு வழங்கப்பட்ட இந்த பணி மிகவும் பயனுள்ளதாக இருந்தது, என்று HR படித்த தீபா கூறினார். மேலும் அடுத்து வரும் காலங்களில் சில NGOs அல்லது கார்ப்பரேஷன் எங்களுக்கு மேலும் பணிகள் வழங்கிடும் என்று நம்புவதாக தீபா கூறுகிறார்.
ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் 20/30 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் மயிலாப்பூர் மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பல்வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்டனர்,
கோவிட் நேரத்தில் சிலருக்கு சவாலான வேலைகள் வழங்கப்பட்டது, இந்த பணி சிலருக்கு சமூகத்திடையே நல்லுறவை ஏற்படுத்தியது, தடுப்பூசி போட சொன்னதால் சிலர் மக்களால் விரட்டப்பட்டனர். இந்த கடினமான சூழ்நிலையில் சிலர் திறமையாக வேலைசெய்தனர்.
2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கொரோனா தொற்று மோசமாக தாக்கிய கேவிபி கார்டன்ஸ் போன்ற பகுதிகளில் பணிபுரிந்தவர்கள், ஆர் ஏ புரத்தின் மிகவும் நெரிசல் மிகுந்த பகுதியில் பணிபுரிந்தவர்கள் தொற்று பாதித்து பெரும் சவால்களை எதிர்கொண்டனர்.
ஒரு கட்டத்தில், தொழிலாளர்கள் குழு 175 க்கும் மேல் இருந்தது. அவர்களுக்கு குடியிருப்பாளர்கள், என்ஜிஓக்கள் மற்றும் மயிலாப்பூர் எம்எல்ஏ ஆகியோர்ஒரு கப் தேநீர் அல்லது காலை உணவை வழங்கினர். சமீபத்திய வாரங்களில், சென்னை மாநகராட்சி கோவிட் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 30 ஆக குறைத்தது.
தொற்றுநோய் வேகமாக பரவி வந்த போது இந்த தொழிலாளர்களுடன் நீங்கள் தொடர்பு கொண்டு உதவி செய்தீர்களா? உங்கள் அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்!
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…
ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக 25 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.…
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…