செய்திகள்

ஆர்.ஏ.புரத்தில் விடை பெற்ற கோவிட் ஒப்பந்த தொழிலாளர்கள்.

சென்னை மாநகராட்சியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட கோவிட் தொழிலாளர்கள், ஏப்ரல் 2020 முதல், சுமார் 17 மாதங்களுக்கு மேலாக ஆர்.ஏ.புரத்தின் அனைத்து பகுதிகளிலும் சேவை செய்த பிறகு ஆகஸ்ட் மாத கடைசி நாளில் விடைபெற்றனர்.

காமராஜ் சாலையின் கடைசி முனையில் உள்ள சென்னை மாநகராட்சியின் தர்மாம்பாள் பூங்காவில் இந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு விழா எடுக்கப்பட்டது. கேக்குகள் வெட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. இந்த பூங்காவில்தான் இந்த தொழிலாளர்களுக்கு கோவிட் நேரத்தில் ஒவ்வொரு நாளும் பயிற்சிகள் மற்றும் பணிகள் சம்பந்தமாக கூட்டங்கள் நடைபெறும்.

“இது ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பம், ஆனால் நம்மில் பலர் வேறு வேலை நியமனம் பெறுவது பற்றி யோசித்தோம்” என்று பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு மூத்த கோவிட் தொழிலாளி தீபா கூறினார்.

கோவிட் நேரத்தில் வருமானமில்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த எங்களுக்கு வழங்கப்பட்ட இந்த பணி மிகவும் பயனுள்ளதாக இருந்தது, என்று HR படித்த தீபா கூறினார். மேலும் அடுத்து வரும் காலங்களில் சில NGOs அல்லது கார்ப்பரேஷன் எங்களுக்கு மேலும் பணிகள் வழங்கிடும் என்று நம்புவதாக தீபா கூறுகிறார்.

ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் 20/30 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் மயிலாப்பூர் மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பல்வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்டனர்,

கோவிட் நேரத்தில் சிலருக்கு சவாலான வேலைகள் வழங்கப்பட்டது, இந்த பணி சிலருக்கு சமூகத்திடையே நல்லுறவை ஏற்படுத்தியது, தடுப்பூசி போட சொன்னதால் சிலர் மக்களால் விரட்டப்பட்டனர். இந்த கடினமான சூழ்நிலையில் சிலர் திறமையாக வேலைசெய்தனர்.

2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கொரோனா தொற்று மோசமாக தாக்கிய கேவிபி கார்டன்ஸ் போன்ற பகுதிகளில் பணிபுரிந்தவர்கள், ஆர் ஏ புரத்தின் மிகவும் நெரிசல் மிகுந்த பகுதியில் பணிபுரிந்தவர்கள் தொற்று பாதித்து பெரும் சவால்களை எதிர்கொண்டனர்.

ஒரு கட்டத்தில், தொழிலாளர்கள் குழு 175 க்கும் மேல் இருந்தது. அவர்களுக்கு குடியிருப்பாளர்கள், என்ஜிஓக்கள் மற்றும் மயிலாப்பூர் எம்எல்ஏ ஆகியோர்ஒரு கப் தேநீர் அல்லது காலை உணவை வழங்கினர். சமீபத்திய வாரங்களில், சென்னை மாநகராட்சி கோவிட் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 30 ஆக குறைத்தது.

தொற்றுநோய் வேகமாக பரவி வந்த போது இந்த தொழிலாளர்களுடன் நீங்கள் தொடர்பு கொண்டு உதவி செய்தீர்களா? உங்கள் அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்!

admin

Recent Posts

இந்த மந்தைவெளி குடியிருப்பாளர் இரயில் பயணத்தின் போது ‘காணவில்லை’

மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…

10 mins ago

பி.எஸ்.பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் ரத்த தான முகாம். மே 1

மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் (மெயின்) 1989-1991 எஸ்.எஸ்.எல்.சி பேட்ஜ் -ஆல் நிர்வகிக்கப்படும் இளம் விழுதுகள் அறக்கட்டளை அதன்…

18 mins ago

பழங்கால தமிழ் திரைப்பட ஹிட் பாடல்களின் கச்சேரி. மே 1. அனுமதி இலவசம்

பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…

2 days ago

முத்துசுவாமி தீட்சிதருக்கு அஞ்சலி: தீம் மியூசிக்கல் ஷோ. ஏப்ரல் 28ல்.

மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…

2 days ago

டாக்டர் சித்ரா மாதவன் உரை: தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள். ஏப்ரல் 27

தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…

2 days ago

தற்கொலை செய்து கொண்ட ஒருவரை இழந்த மக்களுக்கு ஆதரவாக சேவையை தொடங்கும் SNEHA அமைப்பு.

ஆர்.ஏ புரத்தில் உள்ள SNEHA, தற்கொலை தடுப்பு சமூக அமைப்பானது, ஏப்ரல் 25 அன்று தற்கொலைக்குப் பிறகு ஆதரவு (SAS)…

4 days ago