சாந்தோமில் உள்ள ரோசரி மெட்ரிக் பள்ளி மாணவிகளுக்கு கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக பிரபலம் வாய்ந்த ‘ஈராஸ் டைலர்’ கடையை நடத்தி வந்த மொய்தீன் பாய் பள்ளி சீருடைகளை தைத்து கொடுத்து வந்துள்ளார். பள்ளி சீருடைகள் தவிர்த்து இவர் பெண்களுக்கான ஜாக்கெட்டுகள் மற்றும் இதர துணிகள் தைப்பதில் பிரபலம்.
இவருக்கு தற்போது எண்பது வயதாகிறது. எனவே அவர் தன்னுடைய தொழிலை நிறுத்த முடிவு செய்துள்ளார். வரும் நவம்பர் 1 அன்று பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் இவர் ஏற்கனெவே மாணவிகளுக்கு தைத்து வைத்திருந்த சீருடைகளை விற்பனை செய்யவுள்ளார். இவருக்கு தற்போது கடை கிடையாது. எனவே நீங்கள் உங்கள் ரோசரி மெட்ரிக் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு சீருடைகள் வாங்க விரும்பினால், லஸ்ஸில் உள்ள மோகன் ஜுவல்லரி, கனி டிரெசஸ் கடைகள் இருக்கும் வளாகத்தின் அடித்தளத்தில் இருக்கும் டைலரை அணுகவும். இவர் மொய்தீன் பாயிடம் சென்று உங்களுக்கான சீருடைகளை வாங்க உதவுவார்.
லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…