மெரினா கடற்கரையில் செயல்படுத்த புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது

சில மாதங்களாக மெரினா கடற்கரையை சிறப்பாக எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றி சென்னை உயர்நீதி மன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாநகராட்சியிடம் கருத்துக்களை கேட்டு வருகின்றனர். நீதிபதிகள் இந்த வழக்கில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த இந்த வழக்கில் முதலாவதாக மெரினாவை குப்பைகளின்றி எவ்வாறு அழகாக நிர்வகிப்பது, இரண்டாவது கடற்கரை பகுதிகளில் வியாபாரம் செய்துவரும் கடைகளுக்கு உரிமம் வழங்கி எவ்வாறு ஒழுங்குபடுத்துவது, மூன்றவதாக மெரினா லூப் சாலையில் (கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை) உள்ள மீன் வியாபாரம் செய்பவர்களுக்கு புதியதாக மீன் அங்காடி அமைத்து அங்காடியில் மட்டும் மீன் வியாபாரம் செய்ய அனுமதிப்பது, கடைசியாக பட்டினப்பாக்கம் முதல் பெசன்ட்நகர் வரை புதிய லிங்க் சாலை (அடையாறு ஆற்றின் மேலே புதியதாக ஒரு பாலம்) அமைப்பது தொடர்பாகவும் விவாதம் நடைபெற்று வந்தது.

தற்போது வரை இந்த வழக்கு சென்னை மாநகராட்சி மெரினாவில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரே மாதிரியான வகையில் தள்ளுவண்டிகள், மற்றும் உரிமம் வழங்குவது மற்றும் அடையாறு ஆற்றின் மேலே புதியதாக பாலம் அமைப்பது, இதற்கு சென்னை மாநகராட்சி இரண்டு திட்டங்களை வகுத்துள்ளனர். முதல் திட்டம் – இந்த பாலத்தில் சைக்கிள், கார், வேண் போன்ற வாகனங்களை அனுமதித்தல் இதன் செலவு மதிப்பு சுமார் 410 கோடி ரூபாய் – இரண்டாவது திட்டம், மக்கள் பாலத்தில் நடந்து மற்றும் சைக்கிளில் செல்லும் வகையில் சிறியதாக பாலம் அமைத்தல் இதற்கு ஆகும் செலவு சுமார் 230 கோடி ரூபாய் ஆகும் என்று நீதிபதிகளிடம் விளக்கம் அளித்தனர். ஆனால் நீதிபதிகள் சிறிய பாலம் அமைப்பது தேவையில்லை என்றும், அதே நேரத்தில் அடையாறு ஆற்றின் மேலே பெரிய பாலம் அமைத்தால், ஆர்.ஏ. புரத்தில் மற்றும் தற்போதுள்ள அடையாறு பாலத்தில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

admin

Recent Posts

எம்.ஆர்.சி அடுக்குமாடி குடியிருப்புக்கு அமலாக்க இயக்குநரகம் சீல் வைத்துள்ளது. ‘டாஸ்மாக் ஊழல்’ குறித்து விசாரணை

மாநில மதுபான வர்த்தக நிறுவனமான டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி மதிப்பிலான மோசடி தொடர்பான விசாரணை தொடர்பாக, ஆர்.ஏ. புரத்தில் உள்ள…

14 hours ago

ஆர்.கே. மட சாலையில் ‘Green’ illuminated nook. பொது இடங்களை பிரகாசமாக்கும் ஜி.சி.சி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அந்தி பொழுதில் பி.எஸ். பள்ளி மண்டலத்தில் உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில் நீங்கள் நடந்து சென்றால், நன்கு ஒளிரும் பசுமை…

2 days ago

கபாலீஸ்வரர் கோவிலில் பக்தி பாடல் வீடியோக்கள் வெளியீடு: மே 18 மாலை

கற்பகதாசன் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தும் அமெரிக்க ஒன்றியத்தில் பயிற்சி பெற்ற ஒவ்வாமை நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன், தான் எழுதிய பக்தி…

5 days ago

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பி.எஸ். சீனியர் பள்ளி மாணவர்கள்

மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சீனியர் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தனது மாணவர்களுக்கான சமூக சேவை நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய…

6 days ago

மந்தைவெளி மையத்தில் நடைபெற்ற கராத்தே பிளாக் பெல்ட் பயிற்சி முகாம்.

மந்தைவெளியை மையமாகக் கொண்ட அகில இந்திய Boufuugai Inshinryu மையம் 25வது பிளாக் பெல்ட் பயிற்சி முகாமை வெற்றிகரமாக முடித்துள்ளதாகக்…

7 days ago

பெண்களுக்கு உடற்பயிற்சி கூடம் கட்ட மேயரிடம் கவுன்சிலர் கோரிக்கை. மந்தைவெளிப்பாக்கம் பகுதியில் இடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வார்டு 126 ஐ (மந்தைவெளிப்பாக்கம் / மெரினா குப்பம் மண்டலங்களின் ஒரு பகுதி) பிரதிநிதித்துவப்படுத்தும் கவுன்சிலர் அமிர்த வர்ஷினி (காங்கிரஸ்)…

7 days ago