மெரினா காலனியில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் போராட்டம்.

டூமிங் குப்பம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என YN நகர்ப்புற வாழ்விட வாரியத்திடம் கேட்டு, மெரினாவை ஒட்டிய காலனிகளில் வசிப்பவர்கள் இன்று காலை லூப் ரோட்டில் போராட்டம் நடத்தினர்.

சில மாதங்களுக்கு முன்பே அடுக்குமாடி குடியிருப்புகள் தயாரான நிலையில் வாரியம் ஒதுக்கீடு செய்வதில்லை என்றும், ஏன் இந்த தாமதம் ஆகிறது என்று கூறவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

போராட்டம் நடந்த இடத்தில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி அவர்களை கட்டுப்படுத்தினர். காலனியின் திறந்தவெளியில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.

நகரின் பிற பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு வாரியம் குடியிருப்புகளை ஒதுக்குவதை நாங்கள் விரும்பவில்லை என்று ஒரு தலைவர் கூறுகிறார். இதனால் பதற்றம் ஏற்படலாம் என அஞ்சுகின்றனர்.

இங்கு வாரியம் சில காலமாக வீட்டு மனைகளை கட்டி வருகிறது. டூமிங் குப்பத்தில் அதிக எண்ணிக்கையிலான பயனாளிகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அந்த குப்பத்தில் குடியமர்த்தப்பட்டவர்களுக்கு வீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால், கூடுதல் வீடுகள் தேவைப்படுவதால், தேவைக்கேற்ப தொகுதிகள் அல்லது 8/9 மாடிகள் கட்ட வாரியம் விரும்புகிறது.

ஆனால் பல உள்ளூர் மக்கள் உயரமான கட்டிடங்களுக்கு செல்ல விரும்பவில்லை. ஏனென்றால் மேலே சென்று வ்ருவது கடினமாக இருக்கும் என்று பயப்படுகின்றனர்.

admin

Recent Posts

ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம். ஆகஸ்ட்.31

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…

3 weeks ago

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

2 months ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 months ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 months ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 months ago