தனியார் கிளப்பில் நடைபெற்ற 1980களில் சாந்தோம் பள்ளியில் பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி

டிசம்பர் மாதத்தில் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுகிழமை சாந்தோம் பள்ளியில், 1980ம் ஆண்டு பயின்ற சுமார் எண்பத்தியிரண்டு மாணவர்கள் நகரில் உள்ள சிட்டி கிளப் ஒன்றில் சந்திப்பு நிகழ்ச்சிக்காக ஒன்றாக கூடியதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறுகிறார்.

இந்த மாணவர்களே சாந்தோம் பள்ளியில் 10+2 முறையில் பயின்று தேர்ச்சி பெற்ற முதல் பேட்ச் மாணவர்கள்.

வருடத்திற்கு ஒருமுறை அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய் மற்றும் பல நாடுகளில் வேலை பார்த்து வரும் இந்த மாணவர்கள் சென்னை வரும்போது சந்திப்பு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துகின்றனர்.

இந்த குழுவில், சமீபத்தில் இந்திய பௌலிங்கிலிருந்து வெளிவந்த திறமையான பயிற்சியாளர் B.அருண் மற்றும் வயலின் வித்துவான் M. A . கிருஷ்ணசாமி ஆகியோர் பிரபலமான உறுப்பினர்கள்.

பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு உதவிகள் தேவைப்படும்போது பள்ளி முதல்வர் மூலமாக உதவிகள் இவர்கள் செய்து வருவதாக குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தெரிவிக்கிறார்.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தொலைபேசி எண் : 94400 86214

 

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago