அதிக சேதம் ஏற்படுத்தாமல் கரையை கடந்தது நிவர் புயல்.

மயிலாப்பூரில் இன்றைய காலை பொழுது அமைதியான சூழ்நிலையில் காணப்பட்டது. புதுச்சேரிக்கு வடக்கே நள்ளிரவு கரையை கடந்தது நிவர் சூறாவளி. ஆனால் சென்னை நகரம் முழுவதும் பலத்த காற்று வீசியதால் பெரும் சேதம் ஏற்படவில்லை என்பதற்கு பலர் நன்றி தெரிவித்தனர். பல தெருக்களில் ஏராளமான இலைகள் மற்றும் கிளைகள் மற்றும் வேரோடு பிடுங்கப்பட்ட தாவரங்கள் இருந்தன, ஆனால் ஒரு சில மரங்கள் மட்டுமே அங்கும் இங்கும் பிடுங்கியெறியப்பட்டிருந்தது. மின் விநியோகம் பல இடங்களில் எவ்வித தடையுமின்றி வழங்கப்பட்டதாக பொதுமக்கள் சிலர் கூறினர். ஆனால் சில இடங்களில், காற்று வலுவாக வீச தொடங்கியபோது நள்ளிரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சில பகுதிகளில், குடியிருப்பாளர்கள் தங்கள் பிராட்பேண்ட் நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவித்தனர். மற்றவர்கள் ஆவின் தினசரி பால் விநியோகத்தை எவ்வித தடையுமின்றி வழங்கியதற்கு நன்றி தெரிவித்தனர். மாநகராட்சி பணியாளர்கள் விழுந்த மரக் கிளைகளை அகற்றுவது அல்லது போக்குவரத்தைத் தடுக்கும் மரங்களை வெட்டி அகற்றியதை காணமுடிந்தது. மெரினாவில் லூப் சாலை வரை காற்று மணலை வீசியது. இங்குள்ள படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் அதிக அளவு மணலால் மூடப்பட்டிருந்தன. கடல் ஆக்ரோஷமாக காணப்பட்டது.

admin

Recent Posts

பங்குனி திருவிழா 2026: கிராம தேவதைக்கு பூஜை

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி திருவிழாவிற்கான முக்கிய பூஜை இது. இது ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. விழாவை சிறப்பாக…

3 days ago

ஈகை பெருநாள் தொழுகை நேரத்தில் நிரம்பிய மசூதிகள்.

நீண்ட ரமலான் மாதத்திற்குப் பிறகு கொண்டாடப்படும் ஈகைத் திருநாள் பண்டிகையை முன்னிட்டு, இந்த சனிக்கிழமை காலை மயிலாப்பூர் பகுதியில் உள்ள…

4 days ago

‘இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்’ – ஒரு காவல்துறை அதிகாரியின் உரை. மார்ச் 21ல்

'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…

6 days ago

நந்தலாலா மருத்துவ அறக்கட்டளை சார்பில் மருத்துவ முகாம். மார்ச் 22.

நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…

6 days ago

உள்ளூர் தபால் நிலையங்களில் ஸ்பீட் போஸ்ட் (Speed ​​Post) வழங்கும் புதிய சேவைகள். முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்தில் விநியோகம்.

ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…

1 week ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலய மகா சம்ப்ரோக்ஷணம் சிறப்பாக நடைபெற்றது.

மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…

1 week ago