மெரினா மீன் வியாபாரிகளின் கோபத்தை குறைக்கும் முயற்சியில் எம்.எல்.ஏ

மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு, மெரினா லூப் ரோட்டில் மீன் வியாபாரிகள், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மாநகரட்ச்சிக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவை மதித்து நடக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

வாரயிறுதியில் மீன்களுக்கு அதிக கிராக்கி உள்ளதால் தாங்கள் வியாபாரத்தை இழக்க முடியாது என்று பெண் வியாபாரிகள் மத்தியில் கோபம் அதிகமாகியது, இதன் காரணமாக ரோட்டின் வடக்கு முனையில் சனிக்கிழமை காலை வேலு நேரில் சென்றார்.

அன்று காலை, ஆண்கள் மற்றும் பெண் வியாபாரிகள் மீன்களை சாலையோரத்தில் பரப்பினர், மேலும் எம்.எல்.ஏ மற்றும் அவரது குழுவினர் அவர்களை அன்றைக்கு நடைபாதையோரம் செல்லுமாறு கேட்டுக்கொண்டனர் மற்றும் உள்ளூர் போலீசாரை வலுக்கட்டாயமாக இருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

முன்னதாக, பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் சாலையின் மேற்குப் பகுதியில் உள்ள கடைகளை அகற்றினர், மேலும் இங்கு நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த பங்க்கள் மற்றும் குடிசைகளும் இதில் அடங்கும்.

நவீன மீன் சந்தை அமைக்கப்பட்டு ஆறு மாதங்களில் இங்கு சாலை அமைக்கப்படும், மேலும் அனைத்து வியாபாரிகளும் இங்கு தங்குவதற்கு இடமளிக்கப்படும். என்று கூறுகிறார் எம்.எல்.ஏ

சென்னை உயர் நீதிமன்றத்தின் பெஞ்ச் முன்பு, பெருநகர சென்னை மாநகராட்சியிடம் சாலையில் உள்ள அனைத்து வியாபாரிகளையும் அகற்றி, ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள விசாரணையில் நடவடிக்கையை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டது.

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

1 day ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

3 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழா: பிப்ரவரி 26 மாலை ‘லக்ன பத்திரிக்கை’ வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…

4 days ago

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

6 days ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

1 week ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

1 week ago