மெரினா மீன் வியாபாரிகளின் கோபத்தை குறைக்கும் முயற்சியில் எம்.எல்.ஏ

மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு, மெரினா லூப் ரோட்டில் மீன் வியாபாரிகள், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மாநகரட்ச்சிக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவை மதித்து நடக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

வாரயிறுதியில் மீன்களுக்கு அதிக கிராக்கி உள்ளதால் தாங்கள் வியாபாரத்தை இழக்க முடியாது என்று பெண் வியாபாரிகள் மத்தியில் கோபம் அதிகமாகியது, இதன் காரணமாக ரோட்டின் வடக்கு முனையில் சனிக்கிழமை காலை வேலு நேரில் சென்றார்.

அன்று காலை, ஆண்கள் மற்றும் பெண் வியாபாரிகள் மீன்களை சாலையோரத்தில் பரப்பினர், மேலும் எம்.எல்.ஏ மற்றும் அவரது குழுவினர் அவர்களை அன்றைக்கு நடைபாதையோரம் செல்லுமாறு கேட்டுக்கொண்டனர் மற்றும் உள்ளூர் போலீசாரை வலுக்கட்டாயமாக இருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

முன்னதாக, பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் சாலையின் மேற்குப் பகுதியில் உள்ள கடைகளை அகற்றினர், மேலும் இங்கு நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த பங்க்கள் மற்றும் குடிசைகளும் இதில் அடங்கும்.

நவீன மீன் சந்தை அமைக்கப்பட்டு ஆறு மாதங்களில் இங்கு சாலை அமைக்கப்படும், மேலும் அனைத்து வியாபாரிகளும் இங்கு தங்குவதற்கு இடமளிக்கப்படும். என்று கூறுகிறார் எம்.எல்.ஏ

சென்னை உயர் நீதிமன்றத்தின் பெஞ்ச் முன்பு, பெருநகர சென்னை மாநகராட்சியிடம் சாலையில் உள்ள அனைத்து வியாபாரிகளையும் அகற்றி, ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள விசாரணையில் நடவடிக்கையை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டது.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago