மயிலாப்பூரின் வளர்ச்சி திட்டங்கள் பற்றி எம்.எல்.ஏ த.வேலு சட்டசபையில் பேச்சு

மயிலாப்பூர் எம்.எல்.ஏ த.வேலு கடந்த வாரம் தேர்தலுக்கு பிறகு முதன் முதலாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசினார். கொரோனா சூழ்நிலை காரணமாக தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற்றுவருகிறது. வழக்கமாக செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும். இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ மூன்று முக்கியமான விஷயங்கள் பற்றி பேசினார்.

முதலாவதாக மயிலாப்பூரிலுள்ள பழமையான குடிசை மாற்று பகுதிகளை எவ்வாறு புனரமைப்பது என்பது பற்றியும் இரண்டாவதாக மயிலாப்பூரில் அதிகப்படியான கோவில்கள் இருப்பதால் அந்த கோவில்களை எவ்வாறு பாதுகாத்து தூயமையாக வைத்திருப்பது மற்றும் மயிலாப்பூரில் மூன்று தலைமுறைகளாக நிறைய குடும்பங்கள் சில பகுதிகளில் வசித்து வருகின்றனர் என்றும் அவர்களுக்கு இன்னும் பட்டா வழங்கப்படவில்லை என்றும் எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அவர்களுக்கு பட்டா வழங்கவேண்டும் என்றும் பேசினார். மேலும் சிட்டி சென்டர் அருகே உள்ள அம்பேத்கார் பாலம் பகுதியில் நிறைய ஏழை மக்கள் வசித்து வருகின்றனர் என்றும் இந்த பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலங்கள் நீங்கலாக தேவையான அளவு தனியாரிடம் நிலங்களை வாங்கி இங்கு வசிக்கும் மக்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தார்.

 

admin

Recent Posts

அல்போன்சா மைதானத்தில் நடைபெற்ற ‘மாஸ்டர்ஸ்’ டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்

தமிழ்நாடு மாஸ்டர்ஸ் மாநில டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை சமீபத்தில் மந்தை வெளிப்பாக்கம் அல்போன்சா மைதானத்தில் உள்ள ஜி.சி.சி உட்புற மைதானத்தில்…

4 hours ago

தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளது

மந்தைவெளிப்பாக்கம் தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. (இந்த இடம் பொதுவாக…

15 hours ago

சாய்பாபா கோயிலுக்கு அருகிலுள்ள கடைகள் இடிப்பு. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் நடவடிக்கை.

மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளை குடிமைப் பணியாளர்கள்…

1 day ago

மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கடைகளில் சிறப்பு சலுகைகள்

பெண்களுக்கான யோகா இலவச அனுபவம்; அடிப்படை பயிற்சி மந்தைவெளியில் உள்ள யோகா ஃபார் வெல்னஸ் ஸ்டுடியோவில். மார்ச் 8 காலை.…

3 days ago

மயிலாப்பூர் பள்ளி மாணவர்களுக்கான ‘அமைதி கிளப்புகள்’. இறுதிப் போட்டி.

காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…

1 week ago

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கான படிப்பு அரங்கம், குழந்தைகளுக்கான பிரிவும் உள்ளது.

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…

1 week ago