மயிலாப்பூரின் வளர்ச்சி திட்டங்கள் பற்றி எம்.எல்.ஏ த.வேலு சட்டசபையில் பேச்சு

மயிலாப்பூர் எம்.எல்.ஏ த.வேலு கடந்த வாரம் தேர்தலுக்கு பிறகு முதன் முதலாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசினார். கொரோனா சூழ்நிலை காரணமாக தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற்றுவருகிறது. வழக்கமாக செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும். இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ மூன்று முக்கியமான விஷயங்கள் பற்றி பேசினார்.

முதலாவதாக மயிலாப்பூரிலுள்ள பழமையான குடிசை மாற்று பகுதிகளை எவ்வாறு புனரமைப்பது என்பது பற்றியும் இரண்டாவதாக மயிலாப்பூரில் அதிகப்படியான கோவில்கள் இருப்பதால் அந்த கோவில்களை எவ்வாறு பாதுகாத்து தூயமையாக வைத்திருப்பது மற்றும் மயிலாப்பூரில் மூன்று தலைமுறைகளாக நிறைய குடும்பங்கள் சில பகுதிகளில் வசித்து வருகின்றனர் என்றும் அவர்களுக்கு இன்னும் பட்டா வழங்கப்படவில்லை என்றும் எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அவர்களுக்கு பட்டா வழங்கவேண்டும் என்றும் பேசினார். மேலும் சிட்டி சென்டர் அருகே உள்ள அம்பேத்கார் பாலம் பகுதியில் நிறைய ஏழை மக்கள் வசித்து வருகின்றனர் என்றும் இந்த பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலங்கள் நீங்கலாக தேவையான அளவு தனியாரிடம் நிலங்களை வாங்கி இங்கு வசிக்கும் மக்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தார்.

 

admin

Recent Posts

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

1 week ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

2 months ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

2 months ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

2 months ago