Categories: சமூகம்

நெரிசல் மிகுந்த மூன்று காலனி பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றும் பணிகளை எம்.எல்.ஏ தொடங்கிவைத்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் வந்து வெற்றி பெற்ற பிறகு மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு மூன்று திட்டங்களை வகுத்திருந்தார். அதில் முக்கியமான ஒன்று குடிசை மாற்று வாரிய கட்டிடங்கள் உள்ள பகுதிகளில் குப்பைகள் அதிகமாக தேங்கி இருப்பதை அகற்றுவது. மெரினா கடற்கரை அருகே உள்ள நொச்சி நகர் பகுதியில் இந்த பணிகள் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்தது. அடுத்தது மந்தைவெளி பகுதியில் உள்ள கபாலி தோட்டத்தில் இந்த பணிகள் நடைபெற உள்ளதாகவும், அதற்கு அடுத்தது பல்லக்குமாநகர் பகுதியில் இந்த பணிகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் எம்.எல்.ஏ தா. வேலு தெரிவித்துள்ளார்.

இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஒவ்வொரு கட்டிடங்களுக்கு இடையே உள்ள பகுதிகளில் இந்த குப்பைகளை கொட்டியுள்ளனர். இந்த குப்பைகள் நாள் கணக்கில் அகற்ற படாமல் உள்ளது. மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குடிசைகள் உள்ள இடங்களிலும் இந்த பிரச்சனை உள்ளது. இதை பற்றி தெருக்களை சுத்தம் செய்யும் பணியாளர்களிடம் கேட்டபோது இதுபோன்ற இடங்களில் குப்பைகளை அகற்ற தேவையான வசதிகள் இல்லை என்று தெரிவிக்கின்றனர். இந்த குப்பைகளை அகற்றும் பணியை முழு வீச்சில் செய்யவிருப்பதாக எம்.எல்.ஏ தா. வேலு தெரிவித்தார்.

 

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 days ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

3 days ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

4 days ago

திருவேங்கடம் சாலை சீரமைக்கப்பட்டது: ஆனால் சாலை சந்திப்பு மற்றும் தேவநாதன் தெரு ஆகிய இடங்களில் இன்னும் வேலை முடியவில்லை.

மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…

4 days ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஜி.சி.சி.யின் மறுசுழற்சி பொருட்கள் சேமிக்கும் இடத்தில் தீ விபத்து.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…

5 days ago

நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்.

பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…

1 week ago