தேர்தல் முடிவுகள் வந்து வெற்றி பெற்ற பிறகு மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு மூன்று திட்டங்களை வகுத்திருந்தார். அதில் முக்கியமான ஒன்று குடிசை மாற்று வாரிய கட்டிடங்கள் உள்ள பகுதிகளில் குப்பைகள் அதிகமாக தேங்கி இருப்பதை அகற்றுவது. மெரினா கடற்கரை அருகே உள்ள நொச்சி நகர் பகுதியில் இந்த பணிகள் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்தது. அடுத்தது மந்தைவெளி பகுதியில் உள்ள கபாலி தோட்டத்தில் இந்த பணிகள் நடைபெற உள்ளதாகவும், அதற்கு அடுத்தது பல்லக்குமாநகர் பகுதியில் இந்த பணிகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் எம்.எல்.ஏ தா. வேலு தெரிவித்துள்ளார்.
இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஒவ்வொரு கட்டிடங்களுக்கு இடையே உள்ள பகுதிகளில் இந்த குப்பைகளை கொட்டியுள்ளனர். இந்த குப்பைகள் நாள் கணக்கில் அகற்ற படாமல் உள்ளது. மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குடிசைகள் உள்ள இடங்களிலும் இந்த பிரச்சனை உள்ளது. இதை பற்றி தெருக்களை சுத்தம் செய்யும் பணியாளர்களிடம் கேட்டபோது இதுபோன்ற இடங்களில் குப்பைகளை அகற்ற தேவையான வசதிகள் இல்லை என்று தெரிவிக்கின்றனர். இந்த குப்பைகளை அகற்றும் பணியை முழு வீச்சில் செய்யவிருப்பதாக எம்.எல்.ஏ தா. வேலு தெரிவித்தார்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…