தேர்தல் முடிவுகள் வந்து வெற்றி பெற்ற பிறகு மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு மூன்று திட்டங்களை வகுத்திருந்தார். அதில் முக்கியமான ஒன்று குடிசை மாற்று வாரிய கட்டிடங்கள் உள்ள பகுதிகளில் குப்பைகள் அதிகமாக தேங்கி இருப்பதை அகற்றுவது. மெரினா கடற்கரை அருகே உள்ள நொச்சி நகர் பகுதியில் இந்த பணிகள் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்தது. அடுத்தது மந்தைவெளி பகுதியில் உள்ள கபாலி தோட்டத்தில் இந்த பணிகள் நடைபெற உள்ளதாகவும், அதற்கு அடுத்தது பல்லக்குமாநகர் பகுதியில் இந்த பணிகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் எம்.எல்.ஏ தா. வேலு தெரிவித்துள்ளார்.
இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஒவ்வொரு கட்டிடங்களுக்கு இடையே உள்ள பகுதிகளில் இந்த குப்பைகளை கொட்டியுள்ளனர். இந்த குப்பைகள் நாள் கணக்கில் அகற்ற படாமல் உள்ளது. மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குடிசைகள் உள்ள இடங்களிலும் இந்த பிரச்சனை உள்ளது. இதை பற்றி தெருக்களை சுத்தம் செய்யும் பணியாளர்களிடம் கேட்டபோது இதுபோன்ற இடங்களில் குப்பைகளை அகற்ற தேவையான வசதிகள் இல்லை என்று தெரிவிக்கின்றனர். இந்த குப்பைகளை அகற்றும் பணியை முழு வீச்சில் செய்யவிருப்பதாக எம்.எல்.ஏ தா. வேலு தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…