ஊரடங்கு நேரத்திற்கு முன் இரண்டு இளைஞர்கள் சேர்ந்து இந்த கொரோனா நேரத்தில் மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளியில் வசிக்கும் மக்களுக்கு ஒரு சேவையை தொடங்கினர். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திகொண்ட மூத்த குடிமக்களுக்கும், லேசான கொரோனா அறிகுறி உள்ளோருக்கும் தேவையான மருந்துகள், உணவுகள் போன்றவற்றை அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களது வீட்டுக்கு விநியோகம் செய்வது. தற்போது இந்த சேவையின் தேவை அதிகரித்துள்ளதாக இந்த சேவையை செய்து வரும் ராகவேந்தர் தெரிவிக்கிறார். எனவே தேவை இருப்பவர்கள் எங்களது வாட்ஸ் அப் எண்ணுக்கு முதல் நாள் இரவே அவர்களது தேவையை குறிப்பிட்டு வாட்ஸ் அப் செய்தால் நாங்கள் அவர்களுக்கு சேவை அளிப்பது எளிதாக இருக்கும் என்று தெரிவிக்கிறார். அவரது வாட்ஸ் அப் எண்: 8610701344.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…