தேர்தல் முடிவுகள் வந்து வெற்றி பெற்ற பிறகு மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு மூன்று திட்டங்களை வகுத்திருந்தார். அதில் முக்கியமான ஒன்று குடிசை மாற்று வாரிய கட்டிடங்கள் உள்ள பகுதிகளில் குப்பைகள் அதிகமாக தேங்கி இருப்பதை அகற்றுவது. மெரினா கடற்கரை அருகே உள்ள நொச்சி நகர் பகுதியில் இந்த பணிகள் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்தது. அடுத்தது மந்தைவெளி பகுதியில் உள்ள கபாலி தோட்டத்தில் இந்த பணிகள் நடைபெற உள்ளதாகவும், அதற்கு அடுத்தது பல்லக்குமாநகர் பகுதியில் இந்த பணிகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் எம்.எல்.ஏ தா. வேலு தெரிவித்துள்ளார்.
இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஒவ்வொரு கட்டிடங்களுக்கு இடையே உள்ள பகுதிகளில் இந்த குப்பைகளை கொட்டியுள்ளனர். இந்த குப்பைகள் நாள் கணக்கில் அகற்ற படாமல் உள்ளது. மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குடிசைகள் உள்ள இடங்களிலும் இந்த பிரச்சனை உள்ளது. இதை பற்றி தெருக்களை சுத்தம் செய்யும் பணியாளர்களிடம் கேட்டபோது இதுபோன்ற இடங்களில் குப்பைகளை அகற்ற தேவையான வசதிகள் இல்லை என்று தெரிவிக்கின்றனர். இந்த குப்பைகளை அகற்றும் பணியை முழு வீச்சில் செய்யவிருப்பதாக எம்.எல்.ஏ தா. வேலு தெரிவித்தார்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…