அல்போன்சோ விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் விளையாட விரைவில் அனுமதி, எம்.எல்.ஏ உறுதி

மந்தைவெளியில் உள்ள சென்னை மாநகராட்சியின் அல்போன்சா விளையாட்டு மைதானம் நீண்ட நாட்களாக இளைஞர்கள் விளையாட ஏற்றதாக இல்லை. ஏனென்றால் சென்னை மாநகராட்சி மெரினா கடற்கரையில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரே மாதிரி கடைகளை வழங்க ஏற்பாடு செய்து அந்த கடைகளை தயார் செய்து, ஒரு பகுதியை மெரினா கடற்கரையிலும் மற்றொரு பகுதியை இந்த அல்போன்சா மைதானத்திலும் சேமிப்பு கிடங்குபோல வைத்துள்ளனர். இதன் காரணமாக இப்பகுதி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இங்கு விளையாடமுடியவில்லை.

அதே போல ஆர்ஏ. புரத்திலுள்ள சென்னை மாநகராட்சி மைதானமும் சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது சம்பந்தமான புகார் மயிலாப்பூர் எம்.எல்.ஏ விடம் கொடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி இதற்கு தீர்வு காணப்படும் என்று எம்.எல். ஏ தா.வேலு உறுதியளித்துள்ளார்.

admin

Recent Posts

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

4 days ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

5 days ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

1 week ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

2 weeks ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

2 weeks ago