அல்போன்சோ விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் விளையாட விரைவில் அனுமதி, எம்.எல்.ஏ உறுதி

மந்தைவெளியில் உள்ள சென்னை மாநகராட்சியின் அல்போன்சா விளையாட்டு மைதானம் நீண்ட நாட்களாக இளைஞர்கள் விளையாட ஏற்றதாக இல்லை. ஏனென்றால் சென்னை மாநகராட்சி மெரினா கடற்கரையில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரே மாதிரி கடைகளை வழங்க ஏற்பாடு செய்து அந்த கடைகளை தயார் செய்து, ஒரு பகுதியை மெரினா கடற்கரையிலும் மற்றொரு பகுதியை இந்த அல்போன்சா மைதானத்திலும் சேமிப்பு கிடங்குபோல வைத்துள்ளனர். இதன் காரணமாக இப்பகுதி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இங்கு விளையாடமுடியவில்லை.

அதே போல ஆர்ஏ. புரத்திலுள்ள சென்னை மாநகராட்சி மைதானமும் சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது சம்பந்தமான புகார் மயிலாப்பூர் எம்.எல்.ஏ விடம் கொடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி இதற்கு தீர்வு காணப்படும் என்று எம்.எல். ஏ தா.வேலு உறுதியளித்துள்ளார்.

admin

Recent Posts

புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியா பூங்கா மீண்டும் திறப்பு. பார்வையாளர்கள் மற்றும் பள்ளி/கல்லூரி குழுக்கள் பார்வையிடலாம்.

ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…

1 week ago

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

4 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

4 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

4 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

1 month ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

1 month ago