இரண்டு மின் இணைப்பு பெட்டிகள் SWDயின் பாதையில் இருப்பதால், அவை பூமியிலிருந்து உயர்மட்டத்திற்கு உயர்த்தப்பட வேண்டும்.
வார்டு 123 கவுன்சிலரோ அல்லது மயிலாப்பூர் எம்.எல்.ஏ.வோ கடந்த இரண்டு மாதங்களாக உள்ளூர் மின்வாரிய ஊழியர்களிடம் இப்பிரச்னைக்குத் தீர்வு காணச் செய்வதில் எந்த வெற்றியும் பெறவில்லை என்று குடியிருப்பாளர் ஒருவர் கூறினார்.
பெரும்பாலான குடியிருப்பு வளாகங்களில் பல வாரங்களாக ஒரு முனை (single phase) மின்சாரம் மட்டுமே வழங்கப்பட்டுவருகிறது.
லிப்ட் ரு முனை மின்சாரத்தில் வேலை செய்யாது மற்றும் பல மூத்த குடிமக்கள் இங்கு வசிக்கும் நிலையில், வேலை செய்யாத லிப்டை மக்கள் அவசர காலங்களில் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.
மின்சார பிரச்சனைகள் பற்றி நேரடியாக மின் வாரியத்தின் லஸ் அலுவலகத்திலோ அல்லது மின்னகம் செயலியிலோ புகார் அளித்தும், எந்த தீர்வும் இல்லை.
பல நாட்களாக மின்சாரம் இல்லாததால், மேல்நிலைத் நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சில குடியிருப்பு வாசிகள் வேறு இடங்களுக்கு மாறி வருவதாகவும் கூறுகின்றனர்.
செய்தி: ஸ்ரீதர் வெங்கடராமன்
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…
மயிலாப்பூர் அனைவரையும் ஈர்க்கிறது; அதற்குப் பல காரணங்கள் உண்டு. ஸ்ரீ கபாலீஸ்வரர் ஆலயத்தின் பங்குனித் திருவிழாக் காலத்தில், ஆலய வளாகமும்…
மயிலாப்பூர் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான தா. வேலுவை, 2026 சட்டமன்றத் தேர்தல்களுக்கான தனது வேட்பாளராக திமுக தேர்வு செய்துள்ளது.…
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களில், மயிலாப்பூர் தொகுதியிலிருந்து போட்டியிடுவதற்கான தமிழக வெற்றி கழக கட்சியின் வேட்பாளராக, கட்சியின் பொருளாளர் பி.…
மயிலாப்பூரில் நடைபெறும் பங்குனித் திருவிழாவின் தேரோட்ட நிகழ்வுகளை வரைவதற்காக, 'சென்னை வீக்கெண்ட் ஆர்ட்டிஸ்ட்ஸ்' (CWA) குழுவின் உறுப்பினர்கள் மாட வீதிகளின்…
இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் – ஸ்ரீ மகாவீர் சேவா சங்கம், ஆர்.ஏ.புரம். மார்ச் 29.…