பருவமழை 2024: மின் வாரிய குழுவினர் தூங்குகின்றனரா? ஜஸ்டிஸ் சுந்தரம் சாலை பகுதிவாசிகள் கேள்வி?

ஒரு சில மின்வாரிய டிரான்ஸ்பார்மர்கள் / மின் விநியோக பெட்டிகள் ஜஸ்டிஸ் சுந்தரம் சாலையில் தரை மட்டத்தில் உள்ளன, இங்கு மிகவும் தாமதமாக நடைபெற்றுவரும் வடிகால் வேலை, மேலும், ஒரு கட்ட மின் வினியோகம் ஆகிய பிரச்சனைகள் இங்குள்ள குடியிருப்புவாசிகளின் வாழ்க்கையை சீர்குலைத்து வருகிறது.

இரண்டு மின் இணைப்பு பெட்டிகள் SWDயின் பாதையில் இருப்பதால், அவை பூமியிலிருந்து உயர்மட்டத்திற்கு உயர்த்தப்பட வேண்டும்.

வார்டு 123 கவுன்சிலரோ அல்லது மயிலாப்பூர் எம்.எல்.ஏ.வோ கடந்த இரண்டு மாதங்களாக உள்ளூர் மின்வாரிய ஊழியர்களிடம் இப்பிரச்னைக்குத் தீர்வு காணச் செய்வதில் எந்த வெற்றியும் பெறவில்லை என்று குடியிருப்பாளர் ஒருவர் கூறினார்.

பெரும்பாலான குடியிருப்பு வளாகங்களில் பல வாரங்களாக ஒரு முனை (single phase) மின்சாரம் மட்டுமே வழங்கப்பட்டுவருகிறது.
லிப்ட் ரு முனை மின்சாரத்தில் வேலை செய்யாது மற்றும் பல மூத்த குடிமக்கள் இங்கு வசிக்கும் நிலையில், வேலை செய்யாத லிப்டை மக்கள் அவசர காலங்களில் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.

மின்சார பிரச்சனைகள் பற்றி நேரடியாக மின் வாரியத்தின் லஸ் அலுவலகத்திலோ அல்லது மின்னகம் செயலியிலோ புகார் அளித்தும், எந்த தீர்வும் இல்லை.

பல நாட்களாக மின்சாரம் இல்லாததால், மேல்நிலைத் நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சில குடியிருப்பு வாசிகள் வேறு இடங்களுக்கு மாறி வருவதாகவும் கூறுகின்றனர்.

செய்தி: ஸ்ரீதர் வெங்கடராமன்

admin

Recent Posts

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

6 days ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

1 week ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

2 weeks ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

3 weeks ago